நேரடியாக ஓடிடியில் வெளியாகும் கீர்த்தி சுரேஷ் படம் | 22 ஆண்டு காத்திருப்பு : விஷ்ணு மஞ்சு நெகிழ்ச்சி | யாருக்கு யார் வில்லன்? மோகன்லால் மோகன்பாபு போட்டாபோட்டி | மருத்துவர்களின் அலட்சியத்தால் செல்லப்பூனை மரணம் ; திலீப் பட இயக்குனர் போலீசில் புகார் | லண்டனில் கங்குலியுடன் சந்திப்பு ; பிரமித்து விலகாத நவ்யா நாயர் | குபேராவை கேரளாவில் வெளியிடும் துல்கர் சல்மான் | 'தொடரும்' படத்தின் கதை என்னுடையது ; வில்லங்க இயக்குனரின் புதிய சர்ச்சை | 'தி ராஜா சாப்' டீசர் : ஹிந்தி, தெலுங்கு பார்வைகளில் போட்டி | மைனா நந்தினியின் 'குட் டே' | உறுப்பினர் அட்டை இல்லாமல் சினிமாவில் நடிக்க முடியாது : விஷால் அறிக்கை |
நடிகை ஹன்சிகா கடந்தாண்டு டிசம்பரில் தொழிலதிபர் சோஹைல் கதூரியா என்பவரை திருமணம் செய்து கொண்டார். ராஜஸ்தானில் இவர்களது திருமணம் பிரமாண்டமாய் நடந்தது. கடந்த ஒரு மாதமாக திருமண வாழ்க்கையை மகிழ்ச்சி உடன் கொண்டாடி வந்த ஹன்சிகா மீண்டும் படப்பிடிப்பில் நடிக்க துவங்கி உள்ளார். இதற்காக மும்பையில் இருந்து சென்னை வந்த ஹன்சிகாவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பலரும் அவருக்கு ரோஜா பூ கொடுத்து வரவேற்றும், திருமண வாழ்த்தும் தெரிவித்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஹன்சிகா, ‛‛ஒரு மகள் தாய் வீட்டிற்கு வரும் உணர்வை இங்கு வந்தது தருகிறது. மகிழ்ச்சியாக இருக்கிறேன். நந்தகோபால் இயக்கும் படத்தில் இன்று முதல் நடிக்கிறேன். இந்தாண்டு எனது 7 படங்கள் ரிலீஸாக உள்ளது மகிழ்ச்சியை தருகிறது. அந்தவகையில் இந்தாண்டு எனக்கு லக்கியான ஆண்டு. தொடர்ந்து ஒரு மாதம் சென்னையில் படப்பிடிப்பில் பங்கேற்க உள்ளேன். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக உள்ளது. இன்றைய காலத்தில் அனைவரும் சமம். கல்யாண வாழ்க்கைக்கு பின் மோதிரம் தான் மாறி உள்ளது'' என்றார்.