நேரடியாக ஓடிடியில் வெளியாகும் கீர்த்தி சுரேஷ் படம் | 22 ஆண்டு காத்திருப்பு : விஷ்ணு மஞ்சு நெகிழ்ச்சி | யாருக்கு யார் வில்லன்? மோகன்லால் மோகன்பாபு போட்டாபோட்டி | மருத்துவர்களின் அலட்சியத்தால் செல்லப்பூனை மரணம் ; திலீப் பட இயக்குனர் போலீசில் புகார் | லண்டனில் கங்குலியுடன் சந்திப்பு ; பிரமித்து விலகாத நவ்யா நாயர் | குபேராவை கேரளாவில் வெளியிடும் துல்கர் சல்மான் | 'தொடரும்' படத்தின் கதை என்னுடையது ; வில்லங்க இயக்குனரின் புதிய சர்ச்சை | 'தி ராஜா சாப்' டீசர் : ஹிந்தி, தெலுங்கு பார்வைகளில் போட்டி | மைனா நந்தினியின் 'குட் டே' | உறுப்பினர் அட்டை இல்லாமல் சினிமாவில் நடிக்க முடியாது : விஷால் அறிக்கை |
தமிழ், மலையாள படங்களில் நடித்து வருபவர் அமலா பால். தற்போது 'அதோ அந்த பறவை போல', மலையாளத்தில் 'ஆடுஜீவிதம்', ‛கிறிஸ்டோபர்', போன்ற படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் பழனி மலை முருகன் கோயிலுக்கு சென்று குடும்பத்தினருடன் வழிபாடு செய்துள்ளார் அமலாபால்.
சமீபத்தில் கேரளாவில் பிரபலமான திருவைராணிக்குளம் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்றார் அமலாபால். ஆனால், தன்னை அனுமதிக்கவில்லை. 2023லும் மதபாகுபாடு காட்டப்படுவது வருத்தமாக இருக்கிறது என அவர் கூறியிருந்தார்.
இந்நிலையில் பழனியில் சமீபத்தில் கும்பாபிஷேகம் முடிந்த நிலையில் தாய் உள்ளிட்ட குடும்பத்தினருடன் பழனி முருகனை வழிபட்டுள்ளார். ரோப்காரில் அவர் பயணித்தது, தரிசனம் செய்த பின் அவர் எடுத்த போட்டோக்களை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். இந்த போட்டோக்கள் வைரலாகின.