நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

தமிழ், மலையாள படங்களில் நடித்து வருபவர் அமலா பால். தற்போது 'அதோ அந்த பறவை போல', மலையாளத்தில் 'ஆடுஜீவிதம்', ‛கிறிஸ்டோபர்', போன்ற படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் பழனி மலை முருகன் கோயிலுக்கு சென்று குடும்பத்தினருடன் வழிபாடு செய்துள்ளார் அமலாபால்.
சமீபத்தில் கேரளாவில் பிரபலமான திருவைராணிக்குளம் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்றார் அமலாபால். ஆனால், தன்னை அனுமதிக்கவில்லை. 2023லும் மதபாகுபாடு காட்டப்படுவது வருத்தமாக இருக்கிறது என அவர் கூறியிருந்தார்.
இந்நிலையில் பழனியில் சமீபத்தில் கும்பாபிஷேகம் முடிந்த நிலையில் தாய் உள்ளிட்ட குடும்பத்தினருடன் பழனி முருகனை வழிபட்டுள்ளார். ரோப்காரில் அவர் பயணித்தது, தரிசனம் செய்த பின் அவர் எடுத்த போட்டோக்களை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். இந்த போட்டோக்கள் வைரலாகின.