நேரடியாக ஓடிடியில் வெளியாகும் கீர்த்தி சுரேஷ் படம் | 22 ஆண்டு காத்திருப்பு : விஷ்ணு மஞ்சு நெகிழ்ச்சி | யாருக்கு யார் வில்லன்? மோகன்லால் மோகன்பாபு போட்டாபோட்டி | மருத்துவர்களின் அலட்சியத்தால் செல்லப்பூனை மரணம் ; திலீப் பட இயக்குனர் போலீசில் புகார் | லண்டனில் கங்குலியுடன் சந்திப்பு ; பிரமித்து விலகாத நவ்யா நாயர் | குபேராவை கேரளாவில் வெளியிடும் துல்கர் சல்மான் | 'தொடரும்' படத்தின் கதை என்னுடையது ; வில்லங்க இயக்குனரின் புதிய சர்ச்சை | 'தி ராஜா சாப்' டீசர் : ஹிந்தி, தெலுங்கு பார்வைகளில் போட்டி | மைனா நந்தினியின் 'குட் டே' | உறுப்பினர் அட்டை இல்லாமல் சினிமாவில் நடிக்க முடியாது : விஷால் அறிக்கை |
இந்திய அரசின் தகவல் ஒளிபரப்பு துறை அமைச்சகமும், ஷாங்காய் ஒத்துழைப்பு குழுவும் இணைந்து ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழாவை மும்பையில் நடத்துகிறது. கடந்த 27ம் தேதி தொடங்கிய இந்த விழா நாளை(31) வரை நடக்கிறது. இந்த விழாவில் தொடக்க திரைப்படமாக ஊர்வசி நடித்த அவரது 700வது திரைப்படமான அப்பத்தா திரையிடப்பட்டது. இந்த படத்தில் அவர் மகன்களால் கைவிடப்பட்ட ஒரு தாயாக நடித்திருந்தார்.
ஷாங்காய் பட விழாவில் அப்பத்தா திரையிடப்பட்டது குறித்து படத்தின் இயக்குனர் பிரியதர்ஷன் கூறும்போது “இந்த அழகான படத்தின் கதையை என்னிடம் கொண்டு வந்த எழுத்தாளருக்கும், தயாரிப்பாளருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இது மக்களிடம் கொண்டு சேர்க்கும்போது அவர்கள் என்ன மாதிரியான உணர்வுகளை வெளிப்படுத்துவார்கள் என்பதை காண நானும் ஆவலாக இருந்தேன். ஊர்வசி போன்ற திறமையான கலைஞருடன் அவரது 700வது படத்தில் பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது எனது பாக்கியம். இது எனது முந்தைய படங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டது” என்றார்.