திரையுலகில் 22 ஆண்டுகள்: நயன்தாரா நெகிழ்ச்சி | துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்க 3 கோடி சம்பளம் வாங்கிய பூஜா ஹெக்டே! | புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் | துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் |
பாலிவுட் திரையுலகம் கடந்த சில ஆண்டுகளாகவே தனது பெருமையை இழந்து, தென்னிந்தியப் படங்களிடம் தோற்றுக் கொண்டிருந்தது. இழந்த அந்தப் பெருமையை தற்போது 'பதான்' படம் அவர்களுக்கு மீட்டுக் கொடுத்துள்ளது.
படம் வெளியான 5 நாட்களில் மட்டும் 543 கோடி வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனமான யாஷ் ராஜ் பிலிம்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்தியாவில் மட்டும் 335 கோடி மொத்த வசூலாகவும், வெளிநாடுகளில் 208 கோடி ரூபாய் மொத்த வசூலாக அமைந்துள்ளது.
ஒரு ஹிந்திப் படம் அதி வேகமாக 500 கோடிக்கும் அதிகமான மொத்த வசூலைப் பெற்ற முதல் படம் 'பதான்' என்ற சாதனையைத் தற்போது புதிதாக படைத்துள்ளது.
இந்த ஆண்டின் முதல் பெரும் வெற்றிப்படமாக 'பதான்' அமைந்துள்ளது. ஹிந்திப் படங்களின் வசூலில் மேலும் சில புதிய சாதனைகளை இப்படம் படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.