ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? | பிளாஷ்பேக்: உண்ணாவிரதம் இருந்து வெள்ளித்திரையின் உச்சம் தொட்ட பி யூ சின்னப்பா | 4 ஆண்டுகளை நிறைவு செய்த 'மாநாடு' | உங்கள் அறிவுரை தேவைப்படும்போது பெற்றுக் கொள்கிறேன் : ரசிகருக்கு சமந்தா பதில் | தெலுங்கு படமாக இருந்தாலும் கன்னடத்துக்கு முக்கியத்துவம் வேண்டும் : உபேந்திரா | கோவா திரைப்பட விழாவில் சென்னை மாணவியின் ஏஐ படம் |

கிட்டத்தட்ட 70 வயதை தொட்டுள்ள நடிகர் மம்முட்டி மலையாள திரையுலகில் இப்போதும் ஹீரோவாக நடித்து வருகிறார் என்றாலும் ஒவ்வொரு படத்திலும் கதையின் நாயகனாக வித்தியாசமான கதாபாத்திரங்களில் தன்னை ஒப்படைத்து நடித்து வருகிறார். அந்தவகையில் சமீபத்தில் வெளியான நண்பகல் நேரத்து மயக்கம் படத்தில் கூட ஒரு எளிய கிராமத்து மனிதனாக நடித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தி இருந்தார். அதே சமயம் தற்போது அவரது நடிப்பில் உருவாகியுள்ள இன்னொரு படமான காதல் ; தி கோர் என்கிற படத்தில் அரசியல்வாதி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் மம்முட்டி.
இந்த படத்தில் மம்முட்டிக்கு ஜோடியாக கதாநாயகியாக நடித்துள்ளார் ஜோதிகா. மம்முட்டியுடன் இவர் இணைந்து நடிப்பது இதுவே முதன்முறை. அது மட்டுமல்ல பல வருட இடைவெளிக்கு பிறகு மீண்டும் மலையாளத்தில் நடித்துள்ளார் ஜோதிகா. இந்த படத்தை மம்முட்டியின் சொந்த நிறுவனமான மம்முட்டி கம்பெனியே தயாரித்து வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்ட நிலையில் தற்போது போஸ்ட் புரொடக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன என்கிற அப்டேட்டையும் தயாரிப்பு நிறுவனமே தற்போது வெளியிட்டுள்ளது.