திரையுலகில் 22 ஆண்டுகள்: நயன்தாரா நெகிழ்ச்சி | துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்க 3 கோடி சம்பளம் வாங்கிய பூஜா ஹெக்டே! | புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் | துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் |
கிட்டத்தட்ட 70 வயதை தொட்டுள்ள நடிகர் மம்முட்டி மலையாள திரையுலகில் இப்போதும் ஹீரோவாக நடித்து வருகிறார் என்றாலும் ஒவ்வொரு படத்திலும் கதையின் நாயகனாக வித்தியாசமான கதாபாத்திரங்களில் தன்னை ஒப்படைத்து நடித்து வருகிறார். அந்தவகையில் சமீபத்தில் வெளியான நண்பகல் நேரத்து மயக்கம் படத்தில் கூட ஒரு எளிய கிராமத்து மனிதனாக நடித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தி இருந்தார். அதே சமயம் தற்போது அவரது நடிப்பில் உருவாகியுள்ள இன்னொரு படமான காதல் ; தி கோர் என்கிற படத்தில் அரசியல்வாதி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் மம்முட்டி.
இந்த படத்தில் மம்முட்டிக்கு ஜோடியாக கதாநாயகியாக நடித்துள்ளார் ஜோதிகா. மம்முட்டியுடன் இவர் இணைந்து நடிப்பது இதுவே முதன்முறை. அது மட்டுமல்ல பல வருட இடைவெளிக்கு பிறகு மீண்டும் மலையாளத்தில் நடித்துள்ளார் ஜோதிகா. இந்த படத்தை மம்முட்டியின் சொந்த நிறுவனமான மம்முட்டி கம்பெனியே தயாரித்து வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்ட நிலையில் தற்போது போஸ்ட் புரொடக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன என்கிற அப்டேட்டையும் தயாரிப்பு நிறுவனமே தற்போது வெளியிட்டுள்ளது.