ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? | பிளாஷ்பேக்: உண்ணாவிரதம் இருந்து வெள்ளித்திரையின் உச்சம் தொட்ட பி யூ சின்னப்பா | 4 ஆண்டுகளை நிறைவு செய்த 'மாநாடு' | உங்கள் அறிவுரை தேவைப்படும்போது பெற்றுக் கொள்கிறேன் : ரசிகருக்கு சமந்தா பதில் | தெலுங்கு படமாக இருந்தாலும் கன்னடத்துக்கு முக்கியத்துவம் வேண்டும் : உபேந்திரா | கோவா திரைப்பட விழாவில் சென்னை மாணவியின் ஏஐ படம் |

தமிழ் சினிமா உலகில் சமூக வலைத்தளங்களில் அதிகமான அளவில் பரபரப்பை ஏற்படுத்துபவர்களில் சிவகார்த்திகேயன் முக்கியமானவர். அவருக்கு முன்னணி சமூக வலைத்தளங்களில் எப்போதுமே ரசிகர்களின் ஆதரவு அதிகமாக இருக்கும். அவருடைய பாடல்கள் யு டியுப் தளங்களிலும் அதிக பார்வைகளைப் பெறும்.
பொங்கல் தினத்தை முன்னிட்டு தன்னுடைய குடும்பப் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் தளத்தில் பதிவிட்டிருந்தார் சிவகார்த்திகேயன். அந்த புகைப்படத்திற்கு 23 லட்சம் லைக்குகள் கிடைத்துள்ளது. தமிழ் சினிமா பிரபலங்களின் இன்ஸ்டாகிராம் பதிவில் அதிக லைக்குகளைப் பெற்ற பதிவு இது என அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் அதை வைரலாக்கி வருகிறார்கள்.
தமிழ் சினிமா பிரபலங்கள் டுவிட்டர் தளத்தில்தான் அதிகமாக செயல்படுவார்கள். ஆனால், சில ஆண்டுகளாக இன்ஸ்டாகிராம் தளமும் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
சிவகார்த்திகேயன் நடித்து அடுத்து 'மாவீரன்' படம் வெளிவர உள்ளது. அப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிவடையும் எனத் தெரிகிறது.