மோகன்லாலின் ஹிருதயபூர்வம் படத்துக்கு யு சான்றிதழ் | ‛காஞ்சனா 4' படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் என்னை தேடுவார்கள் : நோரா பதேஹி | ‛கஜினி' சிக்ஸ்பேக்கிற்கு அஜித் தான் காரணம் : ஏ.ஆர்.முருகதாஸ் தகவல் | சன்னி லியோன் நடித்த படத்தின் மூன்றாம் பாகத்தில் தமன்னா | ஜனநாயகன் இசை விழாவில் கலந்து கொள்ள ரஜினி, கமலுக்கு அழைப்பா? | '18 மைல்ஸ் தாரணா' : ‛பேச்சுலர்' இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ராஜமவுலி, மகேஷ்பாபு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடும் ஜேம்ஸ் கேமரூன் | ‛ஆந்திரா கிங் தாலுக்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு! | விநாயகர் சதுர்த்தி படங்கள் வருவது சந்தேகம்? | 'மெட்ராஸ் மேட்னி' குழுவினரை அழைத்துப் பாராட்டிய சிவகார்த்திகேயன் |
புதுடில்லி : ராஜ்யசபா நியமன எம்பி.,யாக உள்ள இசையமைப்பாளர் இளையராஜா நடந்து முடிந்த பார்லிமென்ட் குளிர்கால கூட்டத் தொடரில் ஒரு நாள் கூட பங்கேற்கவில்லை.
பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்கள், ஜனாதிபதியால் ராஜ்யசபா நியமன உறுப்பினர்களாக நியமிக்கப்படுவார்கள். அந்த வகையில் இசையமைப்பாளர் இளையராஜா, தடகள வீராங்கனை பி.டி.உஷா, திரைக்கதை எழுத்தாளர் வி.விஜயேந்திர பிரசாத், வீரேந்திர ஹெக்டே ஆகியோர் ராஜ்யசபா நியமன உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர். கடந்த ஆண்டு ஜூலை மாதம் இவர்கள் பதவியேற்றுக் கொண்டனர். இசை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக அமெரிக்கா சென்றிருந்த இளையராஜா இந்தியா திரும்பியதும் பதவியேற்றுக் கொண்டார்.
இந்த நிலையில் சமீபத்தில் நடந்து முடிந்த பார்லிமென்ட் குளிர்கால கூட்டத் தொடரில் ராஜ்யசபா நியமன எம்பியான இசையமைப்பாளர் இளையராஜா ஒரு நாள் கூட பங்கேற்கவில்லை. இது மாநிலங்களவை வெளியிட்டுள்ள பதிவேட்டு குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
துறை சார்ந்த வல்லுனர்களை ராஜ்யசபா உறுப்பினர்களாக தேர்வு செய்வது என்பது அந்த துறையின் சார்பில் உள்ள பிரச்னைகளை அரசின் கவனத்தை கொண்டு வருவதற்காகத்தான். ஆனால் அவ்வாறு நியமிக்கப்படுகிறவர்கள் அதனை வெறும் அலங்கார பதவிகளாகத்தான் பயன்படுத்தி வருகிறார்கள் என்ற விமர்சனம் எழுந்துள்ளது.