ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? | பிளாஷ்பேக்: உண்ணாவிரதம் இருந்து வெள்ளித்திரையின் உச்சம் தொட்ட பி யூ சின்னப்பா | 4 ஆண்டுகளை நிறைவு செய்த 'மாநாடு' | உங்கள் அறிவுரை தேவைப்படும்போது பெற்றுக் கொள்கிறேன் : ரசிகருக்கு சமந்தா பதில் | தெலுங்கு படமாக இருந்தாலும் கன்னடத்துக்கு முக்கியத்துவம் வேண்டும் : உபேந்திரா | கோவா திரைப்பட விழாவில் சென்னை மாணவியின் ஏஐ படம் |

ராஜமவுலி இயக்கத்தில், ஜுனியர் என்டிஆர், ராம்சரண், ஆலியா பட் மற்றும் பலர் நடித்து கடந்த வருடம் வெளிவந்த தெலுங்குப் படம் 'ஆர்ஆர்ஆர்'. பான் இந்தியா படமாக வெளிவந்த இந்தப் படம் ரூ.1000 கோடிக்கும் அதிகமான வசூலை அள்ளியது.
இப்படம் இந்தியா சார்பில் அதிகாரப்பூர்வமாக ஆஸ்கர் விருதுக்கு அனுப்பப்படவில்லை. என்றாலும் நேரடியாக பல பிரிவுகளில் 'ஆர்ஆர்ஆர்' படம் விண்ணப்பிக்கப்பட்டது. இருப்பினும் இரண்டு பிரிவுகளில் இப்படம் விருக்கான போட்டியில் தேர்வாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சிறந்த வெளிநாட்டுப் படங்களுக்கான விருது, சிறந்த ஒரிஜனல் பாடலுக்கான விருது ஆகிய பிரிவுகளில் 'ஆர்ஆர்ஆர்' படம் தேர்வாகலாம் என்கிறார்கள். இன்று மாலை இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு விருதுக்குத் தேர்வாகும் படங்களின் பட்டியல் அதிகாரப்பூர்வமாக வெளியாக உள்ளது. 'ஆர்ஆர்ஆர்' எதில் தேர்வாகும் என தெலுங்குத் திரையுலகினர் மட்டுமல்ல, இந்தியத் திரையுலகினரும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.
'ஆர்ஆர்ஆர்' படத்தில் இடம் பெற்ற 'நாட்டு நாட்டு' பாடல் சிறந்த ஒரிஜனல் பாடலுக்கான கோல்டன் குளோப் விருதை ஏற்கெனவே வென்றுள்ளது.