‛ஹவுஸ்புல் 5' - மீண்டும் அபிஷேக் பச்சனை அழைத்து வரும் சஜித் நதியத்வாலா | சீரியலை விட்டு தூக்கிய சோகத்தில் பிரியங்கா நல்காரி - நடந்தது என்ன? | 'ஒரு நொடி' இயக்குனரின் அடுத்த படம் தொடங்கியது | மே 9ல் வெளியாகும் ராயன் முதல் பாடல் | ‛மணி இன் தி பேங்க்' : யுவன் வெளியிட்ட ஆல்பம் | ஏற்காட்டுக்கு ஜாலி டூர் கிளம்பிய நடிகர்கள் | மோகன்லால் இயக்கும் 'பரோஸ்' பட ரிலீஸ் தேதி அறிவிப்பு | கேரள நர்ஸ் வீட்டிற்கு சென்று டாக்குமென்ட்ரி படம் எடுத்த ஐஸ்வர்யா ரஜினி | பக்தி பட இயக்குனர் 'ஓம்சக்தி' ஜெகதீசன் காலமானார் | லாக்டவுனில் அனுபமா பரமேஸ்வரன் |
கன்னட சினிமாவில் அறிமுகமாகி இப்போது தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் இவர் ஹிந்தியிலும் கால்பதித்து அங்கும் நடித்து வருகிறார். இந்நிலையில், காந்தாரா படத்தை பார்க்கவில்லை என கூறியது, கன்னட சினிமாவை புறக்கணிப்பது மாதிரியாக அவர் நடந்து கொள்வது என அவர் மீது தொடர் விமர்சனங்கள் எழுந்தன. இதனால் சிலமாதங்களாக ராஷ்மிகா நிறைய டிரோல்களில் சிக்குகிறார்.
தன் மீதான விமர்சனங்களுக்கும், டிரோல்களுக்கும் ராஷ்மிகா அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது : ‛‛ஓராண்டாகவே என்னை நிறையபேர் டிரோல் செய்கிறார்கள். உடற்பயிற்சி செய்தால் பையன் என்கிறார்கள். இல்லையெனில் பருமனாக இருப்பதாக சொல்கிறார்கள். பேசாமல் இருந்தால் திமிரு என்கிறார்கள். பேசினாலும் தவறு என்கிறார்கள். நான் என்ன தான் செய்வது. சினிமாவை விட்டு நான் விலக வேண்டும் என நினைக்கிறார்களா. என்னதான் உங்களுக்கு பிரச்னை. உங்களின் வார்த்தைகள் என்னை காயப்படுத்துகின்றன. எனக்கு எதிராக வெறுப்புணர்வை பரப்புவது ஏன் என புரியவில்லை'' என்றார்.