ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? | பிளாஷ்பேக்: உண்ணாவிரதம் இருந்து வெள்ளித்திரையின் உச்சம் தொட்ட பி யூ சின்னப்பா | 4 ஆண்டுகளை நிறைவு செய்த 'மாநாடு' | உங்கள் அறிவுரை தேவைப்படும்போது பெற்றுக் கொள்கிறேன் : ரசிகருக்கு சமந்தா பதில் | தெலுங்கு படமாக இருந்தாலும் கன்னடத்துக்கு முக்கியத்துவம் வேண்டும் : உபேந்திரா | கோவா திரைப்பட விழாவில் சென்னை மாணவியின் ஏஐ படம் |

நடிகர் கவுதம் கார்த்திக் சில ஆண்டுகளாகவே வருடத்திற்கு ஒரு படம் தான் நடித்து. இந்த ஆண்டு பத்து தல படத்தில் சிம்புவுடன் நடித்து முடித்துள்ளார். 16 ஆகஸ்ட் 1947 என்ற படம் உருவாகி வருகிறது. இந்த நிலையில் அடுத்து அவா் ‛கிரிமினல்' என்ற படத்தில் நடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தை பர்சா பிக்சர்ஸ், பிக் பிரிண்ட் பிக்சர்ஸ் சார்பில் மீனாட்சி சுந்தரம், கார்த்திகேயன் தயாரிக்கிறார்கள். தக்ஷினா மூர்த்தி ராமர் என்ற அறிமுகம் இயக்குனர் இயக்குகிறார். பிரசன்னா எஸ்.குமார் ஒளிப்பதிவு செய்கிறார், சாம் சி.எஸ் இசை அமைக்கிறார். கவுதம் கார்த்திக்குடன் சரத்குமார் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். மற்ற நடிகர், நடிகைகள் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியிடப்பட இருக்கிறது.
மதுரையை கதை களமாக கொண்ட கிரைம் த்ரில்லராக உருவாகும் இந்தபடம் ஒரு கிரிமினலுக்கும், போலீஸ் அதிகாரிக்குமான மோதல் கதையாக தயாராகிறது. இதில் கிரிமினலாக கவுதம் கார்த்திக்கும், போலீஸ் அதிகாரியாக சரத்குமாரும் நடிக்கிறார்கள்.