நேரடியாக ஓடிடியில் வெளியாகும் கீர்த்தி சுரேஷ் படம் | 22 ஆண்டு காத்திருப்பு : விஷ்ணு மஞ்சு நெகிழ்ச்சி | யாருக்கு யார் வில்லன்? மோகன்லால் மோகன்பாபு போட்டாபோட்டி | மருத்துவர்களின் அலட்சியத்தால் செல்லப்பூனை மரணம் ; திலீப் பட இயக்குனர் போலீசில் புகார் | லண்டனில் கங்குலியுடன் சந்திப்பு ; பிரமித்து விலகாத நவ்யா நாயர் | குபேராவை கேரளாவில் வெளியிடும் துல்கர் சல்மான் | 'தொடரும்' படத்தின் கதை என்னுடையது ; வில்லங்க இயக்குனரின் புதிய சர்ச்சை | 'தி ராஜா சாப்' டீசர் : ஹிந்தி, தெலுங்கு பார்வைகளில் போட்டி | மைனா நந்தினியின் 'குட் டே' | உறுப்பினர் அட்டை இல்லாமல் சினிமாவில் நடிக்க முடியாது : விஷால் அறிக்கை |
இயக்குனர் முருகதாஸ் கடைசியாக தமிழில் ரஜினியை வைத்து 2020ல் தர்பார் படத்தை இயக்கினார். இந்தபடம் வரவேற்பை பெறவில்லை. இதையடுத்து விஜய்யை வைத்து அவர் படம் இயக்குவதாக இருந்தது. ஆனால் விஜய் மறுத்துவிட்டார். இதன்பின் அவரின் படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. சில நடிகர்களுடன் இணைவதாக செய்திகள் மட்டுமே வந்தன.
இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து அவர் படம் இயக்க உள்ளாராம். ஏற்கனவே இதுபற்றிய செய்திகள் வந்தபோதிலும் இப்போது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது என்கிறார்கள். தற்போது சிவகார்த்திகேயன் ‛அயலான்' படத்தில் நடித்து முடித்துவிட்டு அடுத்து மாவீரன் படத்தில் நடிக்கிறார். அதன்பின் கமல் தயாரிப்பில் ஒரு படத்தில் நடிப்பவர் அதன்பின் முருகதாஸ் படத்தில் இணைய உள்ளாராம். விரைவில் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படம் அதிரடி ஆக் ஷன் கதையில் தயாராகிறது.