ஆதங்கப்பட்ட அனுபமா பரமேஸ்வரன்... : சமாதானப்படுத்திய சுரேஷ் கோபி | நடிகை காவ்யா மாதவனின் தந்தை காலமானார் | 39வது பிறந்தநாள் கொண்டாடிய அஞ்சலி | அரசியல் என்ட்ரி : இளம் நடிகை அனந்திகாவின் ஆசை | அடுத்தடுத்து மூன்று பான் இந்தியா படங்களின் முன்னோட்ட வீடியோ போட்டி | மீண்டும் திரைக்கு வருகிறது அருண் விஜய்யின் “தடையறத் தாக்க” | விஜய் சேதுபதி படத்தில் சம்யுக்தா | 'தி ராஜா சாப்' டீசர் : தன் முந்தைய சாதனையை முறியடிக்காத பிரபாஸ் | நா.முத்துக்குமாருக்கு கரும்பு பிடிக்காதது ஏன் | ஏ.எல்.விஜய் இயக்கத்தில் அடுத்தடுத்து வெளியாக போகும் படங்கள் |
தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பிஸியாக இருப்பவர் ரகுல் ப்ரீத் சிங். தமிழில் தற்போது 'இந்தியன் 2, அயலான்' ஆகிய படங்களில் நடித்து வருகிறார். ஹிந்தியில் ஓடிடியில் நேரடியாக வெளியாகும் 'சாத்ரிவாலி' என்ற படத்திற்கான நிகழ்ச்சி ஒன்றில் அவர் கலந்து கொண்ட போது தென்னிந்திய சினிமா பற்றியும் பேசினார்.
“இந்தியன் 2' படத்தில் நடிப்பது மிகவும் உற்சாகமான ஒன்று. கமல்ஹாசன் சார் அவருக்குள் ஒரு பல்கலைக்கழகத்தையே வைத்துள்ளார். அவருடன் நடிக்க எனக்கு வாய்ப்பு கிடைத்தது மிகவும் அதிர்ஷ்டமானது. கமல் சார், அமித் சார் ஆகியோர் பல்கலைக்கழகங்கள். அவர்கள் தான் சினிமா. இந்திய சினிமா அவர்களைச் சார்ந்தது. 100 வருட இந்திய சினிமாவில் அவர்கள் 60 வருடங்களாக இருக்கிறார்கள். அது மிகவும் சாதனையான விஷயம்.
குறுக்கு வழியில் வெற்றி கிடைக்காது என நம்மை உத்வேகப்படுத்தியவர்கள். நாம் செய்யும் வேலையில் மிகவும் ஆர்வமாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால்தான் அவர்களைப் போன்ற சாதனைகளைச் செய்ய முடியும்,” என்று தெரிவித்துள்ளார்.
'இந்தியன் 2, அயலான்' இரண்டு படங்களிலும் தன்னுடைய வசனப் பகுதிக்கான படப்பிடிப்பு முடிந்துவிட்டதாகவும், பாடல்களில் மட்டும் இன்னும் நடிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.