ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? | பிளாஷ்பேக்: உண்ணாவிரதம் இருந்து வெள்ளித்திரையின் உச்சம் தொட்ட பி யூ சின்னப்பா | 4 ஆண்டுகளை நிறைவு செய்த 'மாநாடு' | உங்கள் அறிவுரை தேவைப்படும்போது பெற்றுக் கொள்கிறேன் : ரசிகருக்கு சமந்தா பதில் | தெலுங்கு படமாக இருந்தாலும் கன்னடத்துக்கு முக்கியத்துவம் வேண்டும் : உபேந்திரா | கோவா திரைப்பட விழாவில் சென்னை மாணவியின் ஏஐ படம் |

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பிஸியாக இருப்பவர் ரகுல் ப்ரீத் சிங். தமிழில் தற்போது 'இந்தியன் 2, அயலான்' ஆகிய படங்களில் நடித்து வருகிறார். ஹிந்தியில் ஓடிடியில் நேரடியாக வெளியாகும் 'சாத்ரிவாலி' என்ற படத்திற்கான நிகழ்ச்சி ஒன்றில் அவர் கலந்து கொண்ட போது தென்னிந்திய சினிமா பற்றியும் பேசினார்.
“இந்தியன் 2' படத்தில் நடிப்பது மிகவும் உற்சாகமான ஒன்று. கமல்ஹாசன் சார் அவருக்குள் ஒரு பல்கலைக்கழகத்தையே வைத்துள்ளார். அவருடன் நடிக்க எனக்கு வாய்ப்பு கிடைத்தது மிகவும் அதிர்ஷ்டமானது. கமல் சார், அமித் சார் ஆகியோர் பல்கலைக்கழகங்கள். அவர்கள் தான் சினிமா. இந்திய சினிமா அவர்களைச் சார்ந்தது. 100 வருட இந்திய சினிமாவில் அவர்கள் 60 வருடங்களாக இருக்கிறார்கள். அது மிகவும் சாதனையான விஷயம்.
குறுக்கு வழியில் வெற்றி கிடைக்காது என நம்மை உத்வேகப்படுத்தியவர்கள். நாம் செய்யும் வேலையில் மிகவும் ஆர்வமாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால்தான் அவர்களைப் போன்ற சாதனைகளைச் செய்ய முடியும்,” என்று தெரிவித்துள்ளார்.
'இந்தியன் 2, அயலான்' இரண்டு படங்களிலும் தன்னுடைய வசனப் பகுதிக்கான படப்பிடிப்பு முடிந்துவிட்டதாகவும், பாடல்களில் மட்டும் இன்னும் நடிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.