திரையுலகில் 22 ஆண்டுகள்: நயன்தாரா நெகிழ்ச்சி | துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்க 3 கோடி சம்பளம் வாங்கிய பூஜா ஹெக்டே! | புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் | துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் |
பிச்சைக்காரன் 2 படத்தின் படப்பிடிப்பு மலேசியாவில் நடைபெற்றபோது ஏற்பட்ட விபத்தில் நடிகர் விஜய் ஆண்டனி காயம் அடைந்தார். அதையடுத்து மலேசியாவில் சிகிச்சை பெற்று வந்த அவர் தற்போது சென்னை வந்திருக்கிறார். அவரது உடல்நிலை குறித்து பல்வேறு விதமான வதந்திகள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இந்த நிலையில் இயக்குனர் சுசீந்திரன், விஜய் ஆண்டனியின் உடல்நிலை குறித்து தனது சமூக வலைதளத்தில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். அதில், பிச்சைக்காரன்- 2 படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தில் காயமடைந்த விஜய் ஆண்டனி இரண்டு நாட்களுக்கு முன்பே சென்னையில் உள்ள அவரது வீட்டுக்கு வந்து விட்டார். அவரை இரண்டு வாரங்களுக்கு ஓய்வு எடுக்குமாறு மருத்துவர்கள் கூறியிருக்கிறார்கள். கூடிய சீக்கிரமே ரசிகர்களிடம் வீடியோ மூலமாக அவர் பேசுவார். ரசிகர்கள் யாரும் பயப்பட வேண்டாம். விஜய் ஆண்டனி பற்றிய தவறான வதந்திகளை நம்ப வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன் என்று சுசீந்திரன் தனது கைப்பட எழுதி அந்த பதிவை வெளியிட்டுள்ளார்.