ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? | பிளாஷ்பேக்: உண்ணாவிரதம் இருந்து வெள்ளித்திரையின் உச்சம் தொட்ட பி யூ சின்னப்பா | 4 ஆண்டுகளை நிறைவு செய்த 'மாநாடு' | உங்கள் அறிவுரை தேவைப்படும்போது பெற்றுக் கொள்கிறேன் : ரசிகருக்கு சமந்தா பதில் | தெலுங்கு படமாக இருந்தாலும் கன்னடத்துக்கு முக்கியத்துவம் வேண்டும் : உபேந்திரா | கோவா திரைப்பட விழாவில் சென்னை மாணவியின் ஏஐ படம் |

சின்னத்திரை நடிகையான ஆலியா மானசாவுக்கு சில தினங்களுக்கு முன்பு காலில் காயம் ஏற்பட்டது. அதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது தனக்கு அந்த விபத்து எப்படி ஏற்பட்டது என்பது குறித்து அவர் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், சமீபத்தில் நடந்த கபடி போட்டி ஒன்றில் சிங்கப்பெண்கள் என்ற அணியில் தான் இடம்பெற்றதாகவும், அந்த கபடி விளையாட்டின் போது தனது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார். கபடி விளையாடிய போது தனது காலில் முறிவு ஏற்பட்டு தான் வலியால் துடித்த அந்த வீடியோவையும் பதிவிட்டுள்ளார். மேலும் தற்போது அறுவை சிகிச்சை செய்துள்ள ஆலியா மானஸாவை ஒரு மாத காலம் ஓய்வெடுக்குமாறு மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்களாம். ஆலியா தற்போது இனியா என்ற தொடரில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.