ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? | பிளாஷ்பேக்: உண்ணாவிரதம் இருந்து வெள்ளித்திரையின் உச்சம் தொட்ட பி யூ சின்னப்பா | 4 ஆண்டுகளை நிறைவு செய்த 'மாநாடு' | உங்கள் அறிவுரை தேவைப்படும்போது பெற்றுக் கொள்கிறேன் : ரசிகருக்கு சமந்தா பதில் | தெலுங்கு படமாக இருந்தாலும் கன்னடத்துக்கு முக்கியத்துவம் வேண்டும் : உபேந்திரா | கோவா திரைப்பட விழாவில் சென்னை மாணவியின் ஏஐ படம் |

தொலைக்காட்சி நடிகையாக அறிமுகமான பிரியா பவானி சங்கர், சினிமாவில் இன்று வளர்ந்து வரும் நடிகையாக பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இந்நிலையில், அவர் பணத்துக்காக மட்டுமே நடிக்க வந்ததாக அவரே கூறியது போல் இணையதளங்களில் செய்திகள் பரவி சர்ச்சையை கிளப்பியது.
இதுகுறித்து பதிவிட்டுள்ள ப்ரியா பவானி சங்கர், 'மாப்ள சொம்ப கொடுத்தா தான் தாலி கட்டுவாறாம் என்கிற மோடில் ஊடகங்களில் செய்தி பரவி வருகிறது. முதலில் நான் கூறியதாக வெளிவந்த 'ஸ்டேமெண்ட் சர்ச்சை' குறித்து பேச வேண்டாம் என்று தான் இருந்தேன். அந்த தகவலின் நம்பகத்தன்மை தெரியாமல் பதிவிட்டு வருகின்றனர். முதலில் நான் அப்படி சொல்லவே இல்லை. அப்படியே நான் சொல்லியிருந்தாலும் அதில் என்ன தவறு இருக்கிறது. பணத்திற்காக தான் அனைவரும் வேலை செய்கிறோம். ஒரு நடிகர்/நடிகையிடம் இருந்து வந்தால் மட்டும் ஏன் இவ்வளவு கேவலமாக பார்க்கிறீர்கள்?. என் வழியில் நான் வேலை செய்கிறேன்' என தெளிவாக விளக்கமளித்து சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.