திரையுலகில் 22 ஆண்டுகள்: நயன்தாரா நெகிழ்ச்சி | துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்க 3 கோடி சம்பளம் வாங்கிய பூஜா ஹெக்டே! | புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் | துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் |
கொச்சி சட்டக்கல்லூரியில் நடந்த விழாவில் நடிகை அபர்ணா பாலமுரளி கலந்து கொண்டார். அப்போது மேடையேறிய மாணவர் ஒருவர் அபர்ணாவின் தோளில் கைபோட முயன்றார். அவரிடமிருந்து நழுவிய அபர்ணா அந்த மாணவரின் அத்துமீறலை அந்த இடத்திலேயே கண்டித்தார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. அந்த மாணவருக்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர். இந்த சம்பவம் தனக்கு மிகுந்த வேதனையை அளித்தது என்றும், ஒரு பெண்ணின் சம்மதம் இல்லாமல் அவரது உடலை தொடுவது கடும் கண்டனத்திற்குரியது என்றும் அபர்ணா பாலமுரளி கூறினார். இது குறித்து நான் புகார் கூற விரும்பவில்லை. அதற்கு எனக்கு நேரமும் இல்லை என்றும் அவர் கூறினார்.
இந்த நிலையில் நடந்த சம்பவத்திற்கு சட்டக் கல்லூரி மாணவர் பேரவை மன்னிப்பு கேட்டுக் கொண்டுள்ளது. மேலும் அபர்ணா பாலமுரளியிடம் அத்துமீறி நடந்து கொண்ட கல்லூரி மாணவரை சட்டக் கல்லூரி முதல்வர் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.