மோகன்லாலின் ஹிருதயபூர்வம் படத்துக்கு யு சான்றிதழ் | ‛காஞ்சனா 4' படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் என்னை தேடுவார்கள் : நோரா பதேஹி | ‛கஜினி' சிக்ஸ்பேக்கிற்கு அஜித் தான் காரணம் : ஏ.ஆர்.முருகதாஸ் தகவல் | சன்னி லியோன் நடித்த படத்தின் மூன்றாம் பாகத்தில் தமன்னா | ஜனநாயகன் இசை விழாவில் கலந்து கொள்ள ரஜினி, கமலுக்கு அழைப்பா? | '18 மைல்ஸ் தாரணா' : ‛பேச்சுலர்' இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ராஜமவுலி, மகேஷ்பாபு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடும் ஜேம்ஸ் கேமரூன் | ‛ஆந்திரா கிங் தாலுக்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு! | விநாயகர் சதுர்த்தி படங்கள் வருவது சந்தேகம்? | 'மெட்ராஸ் மேட்னி' குழுவினரை அழைத்துப் பாராட்டிய சிவகார்த்திகேயன் |
கொச்சி சட்டக்கல்லூரியில் நடந்த விழாவில் நடிகை அபர்ணா பாலமுரளி கலந்து கொண்டார். அப்போது மேடையேறிய மாணவர் ஒருவர் அபர்ணாவின் தோளில் கைபோட முயன்றார். அவரிடமிருந்து நழுவிய அபர்ணா அந்த மாணவரின் அத்துமீறலை அந்த இடத்திலேயே கண்டித்தார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. அந்த மாணவருக்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர். இந்த சம்பவம் தனக்கு மிகுந்த வேதனையை அளித்தது என்றும், ஒரு பெண்ணின் சம்மதம் இல்லாமல் அவரது உடலை தொடுவது கடும் கண்டனத்திற்குரியது என்றும் அபர்ணா பாலமுரளி கூறினார். இது குறித்து நான் புகார் கூற விரும்பவில்லை. அதற்கு எனக்கு நேரமும் இல்லை என்றும் அவர் கூறினார்.
இந்த நிலையில் நடந்த சம்பவத்திற்கு சட்டக் கல்லூரி மாணவர் பேரவை மன்னிப்பு கேட்டுக் கொண்டுள்ளது. மேலும் அபர்ணா பாலமுரளியிடம் அத்துமீறி நடந்து கொண்ட கல்லூரி மாணவரை சட்டக் கல்லூரி முதல்வர் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.