ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? | பிளாஷ்பேக்: உண்ணாவிரதம் இருந்து வெள்ளித்திரையின் உச்சம் தொட்ட பி யூ சின்னப்பா | 4 ஆண்டுகளை நிறைவு செய்த 'மாநாடு' | உங்கள் அறிவுரை தேவைப்படும்போது பெற்றுக் கொள்கிறேன் : ரசிகருக்கு சமந்தா பதில் | தெலுங்கு படமாக இருந்தாலும் கன்னடத்துக்கு முக்கியத்துவம் வேண்டும் : உபேந்திரா | கோவா திரைப்பட விழாவில் சென்னை மாணவியின் ஏஐ படம் |

துணிவு படத்தின் வெற்றியைத் தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கும் தனது 62 வது படத்தில் நடிக்கப் போகிறார் அஜித்குமார். இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் இரண்டு வாரங்களில் தொடங்க உள்ளது. லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இதுவரை காதல் சம்பந்தப்பட்ட கதைகளையே படமாக்கி வந்துள்ள விக்னேஷ் சிவன் இந்த படத்தில் ஆக்சன் கலந்த ஒரு கதையை படமாக்க போகிறார். இப்படத்தில் திரிஷா நாயகியாக நடிப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில் ஐஸ்வர்யா ராய் நடிப்பதாக ஏற்கனவே தகவல் வெளியானது. இப்போது இன்னொரு நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதோடு அரவிந்த்சாமி வில்லனாக நடிக்கும் இந்த படத்தில், சந்தானம் மீண்டும் காமெடியனாக நடிப்பதற்கு கமிட்டாகி இருக்கிறார். அந்த வகையில் அஜித்தின் 62வது படம் ஒரு மிகப்பெரிய நட்சத்திர பட்டாளத்துடன் தயாராக உள்ளது .