ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? | பிளாஷ்பேக்: உண்ணாவிரதம் இருந்து வெள்ளித்திரையின் உச்சம் தொட்ட பி யூ சின்னப்பா | 4 ஆண்டுகளை நிறைவு செய்த 'மாநாடு' | உங்கள் அறிவுரை தேவைப்படும்போது பெற்றுக் கொள்கிறேன் : ரசிகருக்கு சமந்தா பதில் | தெலுங்கு படமாக இருந்தாலும் கன்னடத்துக்கு முக்கியத்துவம் வேண்டும் : உபேந்திரா | கோவா திரைப்பட விழாவில் சென்னை மாணவியின் ஏஐ படம் |

ஒரு நேரடி ஹிந்திப் படம் நீண்ட இடைவெளிக்குப் பிறகு முன்பதிவில் முன்னேறி வருவதைப் பார்த்து பாலிவுட்டினர் பெருமைப்பட்டு வருகிறார்கள். சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில், ஷாரூக்கான், தீபிகா படுகோனே, ஜான் ஆபிரகாம் மற்றும் பலர் நடிக்கும் பதான் படம் அடுத்த வாரம் ஜனவரி 25ம் தேதி ஹிந்தி, தெலுங்கு, தமிழ் ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது.
இப்படத்திற்கான முன்பதிவு உலகம் முழுவதும் ஆரம்பமாகி உள்ளது. ஷாரூக்கான் கதாநாயகனாக நடித்த ஒரு படம் நான்கு வருடங்களுக்குப் பிறகு வெளியாவதால் ரசிகர்கள் படத்தைப் பார்க்க ஆவலாக உள்ளனர். எனவே, படத்திற்கான முன்பதிவு சிறப்பாக நடந்து வருவதாக பாலிவுட் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்பதிவு மூலமாக மட்டுமே சுமார் 10 கோடி வரை வசூலாகிவிட்டது என்கிறார்கள். படம் வெளியாக இன்னும் ஐந்து நாட்கள் உள்ளதால் முன்பதிவு வசூல் இன்னும் அதிகமாக வாய்ப்புள்ளதாகச் சொல்கிறார்கள். தென்னிந்திய டப்பிங் படங்கள் நேரடி பாலிவுட் படங்களை மிஞ்சும் அளவிற்கு கடந்த வருடம் வசூலைக் குவித்தது. மேலும், இந்த வருடப் பொங்கலுக்கு வெளியான நான்கு முக்கிய தென்னிந்தியப் படங்கள் 500 கோடி வசூலைக் கடந்துள்ளது. எனவே, 'பதான்' படம் பாலிவுட்டின் இந்த ஆண்டு வெற்றிக் கணக்கை ஆரம்பித்து வைக்கும் என்று நம்புகிறார்கள்.