ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? | பிளாஷ்பேக்: உண்ணாவிரதம் இருந்து வெள்ளித்திரையின் உச்சம் தொட்ட பி யூ சின்னப்பா | 4 ஆண்டுகளை நிறைவு செய்த 'மாநாடு' | உங்கள் அறிவுரை தேவைப்படும்போது பெற்றுக் கொள்கிறேன் : ரசிகருக்கு சமந்தா பதில் | தெலுங்கு படமாக இருந்தாலும் கன்னடத்துக்கு முக்கியத்துவம் வேண்டும் : உபேந்திரா | கோவா திரைப்பட விழாவில் சென்னை மாணவியின் ஏஐ படம் |

பொங்கலை முன்னிட்டு 'வாரிசு, துணிவு' ஆகிய படங்கள் வெளிவந்ததால் இந்த வாரம் எந்த புதிய படங்களும் வெளியாக வாய்ப்பில்லை என்று சொல்லப்பட்டது. ஆனால், இன்று சத்தமில்லாமல் ஒரு படம் வெளியாகிறது. பாபி சிம்ஹா, ஷிவதா, பூஜா தேவரியா, கருணாகரன் மற்றும் பலர் நடிக்க விஜய் தேசிங்கு இயக்கத்தில் உருவாகியுள்ள 'வல்லவனுக்கும் வல்லவன்' தான் அந்தப் படம்.
ஆறு ஆண்டுகளுக்கு முன்பு இப்படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. அப்போது இந்தப் படத்தின் தயாரிப்பாளர்களாக 'மெர்சல்' படத்தைத் தயாரித்த ராமசாமி, பாபி சிம்ஹா, சதீஷ் சுந்தராஜ ஆகியோர் இருந்திருக்கிறார்கள். இன்று வெளியான வெளியீட்டு போஸ்டரில் பாபி சிம்ஹாவின் மனைவியான ரேஷ்மி சிம்ஹா, ராமசாமி ஆகியோரது பெயர்கள் மட்டுமே தயாரிப்பாளர்களாக இடம் பெற்றுள்ளது.
2016ம் வருடத்தில் பாபி சிம்ஹா தமிழில் பிஸியான கதாநாயகனாகவும் இருந்தார். அப்போது இந்தப் படம் வெளிவந்திருக்க வேண்டியது. ஆறு வருடம் தாமதமாக வருகிறது. பொங்கலுக்கு வெளிவந்த தெலுங்குப் படமான சிரஞ்சீவி நடித்த 'வால்டர் வீரய்யா' படத்தில் பாபி சிம்ஹா நடித்துள்ளார்.
தமிழில் 2019க்குப் பிறகு பாபி சிம்ஹா நடித்து வெளிவரும் படம் 'வல்லவனுக்கும் வல்லவன்'.