ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? | பிளாஷ்பேக்: உண்ணாவிரதம் இருந்து வெள்ளித்திரையின் உச்சம் தொட்ட பி யூ சின்னப்பா | 4 ஆண்டுகளை நிறைவு செய்த 'மாநாடு' | உங்கள் அறிவுரை தேவைப்படும்போது பெற்றுக் கொள்கிறேன் : ரசிகருக்கு சமந்தா பதில் | தெலுங்கு படமாக இருந்தாலும் கன்னடத்துக்கு முக்கியத்துவம் வேண்டும் : உபேந்திரா | கோவா திரைப்பட விழாவில் சென்னை மாணவியின் ஏஐ படம் |

சில ஆண்டுகளுக்கு முன்பு கன்னடத்தில் தண்டுபால்யா என்ற படம் வெளிவந்தது. கொடூர கொலைகளை செய்யும் ஒரு கும்பலை பற்றிய படம். அதே போன்று இப்போது உருவாகி உள்ள படம் கொட்டேஷன் கேங். இந்த படத்தில் பிரியாமணி, சன்னி லியோன், ஜாக்கி ஷெராப், சாரா அர்ஜூன், அஷ்ரப் மல்லிசேரி, ஜெய பிரகாஷ், அக்ஷயா, பிரதீப் குமார், விஷ்ணோ வாரியர், சோனல் கில்வானி, கியாரா, சட்டிண்டர், ஷெரின் நடித்துள்ளனர். அருண் பத்மநாபன் ஒளிப்பதிவு செய்துள்ளார். டிரம்ஸ் சிவமணி இசை அமைத்துள்ளார்.
இதில் பிரியாமணி கூலிக்காக கொலை செய்யும் படையின் தலைவியாக நடித்திருப்பதாக கூறப்படுகிறது. படம் பற்றி இயக்குனர் விவேக் கண்ணன் கூறியதாவது: இந்தக் கதையை நாங்கள் ஓடிடிக்கான படமாகதான் ஆரம்பித்தோம். ஆனால், இது தியேட்டருக்கான படம் என்பதை பின்பு உணர்ந்தோம். இந்தப் படம் கேங் வார் குறித்தானது கிடையாது. ஆனால் உணர்ச்சி மிகுந்த பணத்துக்காக கொலை செய்யக்கூடிய கொலைகாரர்கள் பற்றிய கதையாக இது இருக்கும்.
சென்னை, மும்பை மற்றும் காஷ்மீர் ஆகிய இடங்களில் படமாக்கி உள்ளோம். பிரியாமணியிடம் இந்த கதையை சொன்னதும் கதை பிடித்து உடனே நடிக்க ஒப்புக் கொண்டார்.அதேபோல, ஜாக்கி ஷெராப் கதைக்கு உள்ளே வந்ததும் இது பான் இந்தியா படமாக மாறியது. படத்தில் சன்னி லியோன் தீவிரமான நடிப்பைக் கொடுத்துள்ளார். சாரா அர்ஜூன் இதுவரை கண்டிராத ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். என்றார்.