நேரடியாக ஓடிடியில் வெளியாகும் கீர்த்தி சுரேஷ் படம் | 22 ஆண்டு காத்திருப்பு : விஷ்ணு மஞ்சு நெகிழ்ச்சி | யாருக்கு யார் வில்லன்? மோகன்லால் மோகன்பாபு போட்டாபோட்டி | மருத்துவர்களின் அலட்சியத்தால் செல்லப்பூனை மரணம் ; திலீப் பட இயக்குனர் போலீசில் புகார் | லண்டனில் கங்குலியுடன் சந்திப்பு ; பிரமித்து விலகாத நவ்யா நாயர் | குபேராவை கேரளாவில் வெளியிடும் துல்கர் சல்மான் | 'தொடரும்' படத்தின் கதை என்னுடையது ; வில்லங்க இயக்குனரின் புதிய சர்ச்சை | 'தி ராஜா சாப்' டீசர் : ஹிந்தி, தெலுங்கு பார்வைகளில் போட்டி | மைனா நந்தினியின் 'குட் டே' | உறுப்பினர் அட்டை இல்லாமல் சினிமாவில் நடிக்க முடியாது : விஷால் அறிக்கை |
தமிழ் திரையுலகில் 1988ம் ஆண்டு டி.ராஜேந்தர் இயக்கத்தில் வெளியான 'என் தங்கை கல்யாணி' திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் வடிவேலு. அதனைத் தொடர்ந்து 'என் ராசாவின் மனசிலே', 'சின்ன கவுண்டர்', 'அரண்மனை கிளி' போன்ற படங்களில் நடித்து தனது நடிப்பு திறமை மூலமாக தனிப்பட்ட இடத்தை பிடித்தார்.
காமெடி நடிகராக அறிமுகமான வடிவேலு அதன் பின் ஹீரோவாக பல படங்களில் நடித்தார். கொரோனா காலத்தில் திரையுலகில் இருந்து நடிகர் வடிவேலு விலகியிருந்தார். சமீபத்தில் சுராஜ் இயக்கத்தில் 'நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்' திரைப்படம் மூலம் நடிகர் வடிவேலு ரீஎன்டரி கொடுத்தார்.
சென்னையில் படப்பிடிப்பில் பங்கேற்றாலும், தன் சொந்த ஊரான மதுரையில் குடும்பத்தினருடன் நடிகர் வடிவேலு வசித்து வந்தார். உடல் நலம் குன்றியிருந்த வடிவேலுவின் தாயார் வைத்தீஸ்வரி (எ) சரோஜினி அம்மாள் (எ) பாப்பா (83 வயது) ஐராவதநல்லூரில் உள்ள அவரது வீட்டில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று நள்ளிரவில் அவர் காலமானார். நடிகர் வடிவேல் தாயாரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். அவருக்கு திரையுலகினர் ஆறுதல் கூறி வருகின்றனர்.
முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் செய்தி: நடிகர் வடிவேலுவின் அன்புத்தாயார் சரோஜினி அம்மாள் என்கிற பாப்பா உடல்நலக்குறைவு காரணமாக இயற்கை எய்தினார் என்ற செய்தி அறிந்து மிகவும் வருத்தமுற்றேன்.
ஆளாக்கி அழகு பார்த்த அன்னையின் மறைவு என்பது எந்த ஒரு மகனுக்கும் ஈடுசெய்ய இயலாத இழப்பாகும். வடிவேலு மற்றும் அவர்தம் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு தெரிவித்துள்ளார்.