இந்த மாதிரி வெற்றிக்காக 10 ஆண்டுகள் காத்திருந்தேன் : ‛ஆட்டமா தேரோட்டமா' பாடல் குறித்து ரம்யா கிருஷ்ணன் | நிதின் ஜோடியான பூஜா ஹெக்டே | மறுபிரவேசத்துக்கு வலுவான கதாபாத்திரங்களை தேடும் பிரணிதா | ஜனநாயகன் படப்பிடிப்பு தளத்துக்கு திரண்ட ரசிகர்கள் : பாபி தியோல் ஆச்சரிய தகவல் | பொய் செய்தி பரப்பாதீர்கள் : புகழ் வேதனை | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் பிரேமலு நாயகி | மிருணாள் தாக்கூர் உடன் இணைய விரும்பும் சிவகார்த்திகேயன் | நடிகராக அறிமுகமாகும் கங்கை அமரன் | அஜித் 64 படத்தில் மிஷ்கின்? | உண்மை சம்பவங்கள் அடிப்படையில் சிறை : லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட முதல்பார்வை |
விஜய், ராஷ்மிகா மந்தனா மற்றும் பலர் நடிப்பில் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் கடந்த வாரம் வெளிவந்த படம் 'வாரிசு'. இப்படம் தமிழில் வெளியான மூன்று நாட்களுக்குப் பிறகே தெலுங்கில் வெளியானது. தமிழில் கலவையான விமர்சனங்கள் வந்த நிலையில் அதன் பின் தெலுங்கில் வெளியானால் அது படத்தின் வசூலை பாதிக்குமோ என்று அச்சப்பட்டார்கள். ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை. தெலுங்கு ரசிகர்களுக்குப் படம் பிடித்துள்ளது என்பது அப்படத்திற்குக் கிடைத்த வசூலை வைத்து புரிந்து கொள்ள முடிகிறது.
நான்கு நாட்களில் இப்படம் தெலுங்கில் சுமார் 20 கோடியை வசூலித்துள்ளதாம். அதில் பங்குத் தொகையாக மட்டும் சுமார் 11 கோடி கிடைத்துள்ளது என்கிறார்கள். படத்தின் தெலுங்கு உரிமை 14 கோடிக்கு விற்கப்பட்டுள்ளதால் படம் லாபத்தைப் பெற இன்னும் 3 கோடி வசூலித்தாக வேண்டும். அதே சமயம் கர்நாடகா, கேரளா மாநிலங்களில் இப்படம் லாபத்தைத் துவக்கிவிட்டது என்று சொல்கிறார்கள். கடந்த ஒரு வாரத்தில் ஒட்டுமொத்தமாக 'வாரிசு' படம் 210 கோடி வசூலித்துள்ளது என்பதை தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.