ஒரே மாதத்தில் திரைக்கு வரும் கிர்த்தி ஷெட்டியின் மூன்று படங்கள் | 100 பேர் வந்தாலும்....! பிரதீப் ரங்கநாதனின் 'டியூட்' படத்தின் டிரைலர் வெளியானது! | ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் இணையும் முன்னனி நடிகைகள் | இம்மாதத்தில் ஓடிடியில் வெளியாகும் 'லோகா, இட்லிகடை' | 500 கோடி வசூலை நோக்கி 'காந்தாரா சாப்டர் 1' | அரசன் படத்தின் புதிய அப்டேட் : சுதீப் இணைய வாய்ப்பு | சிவகார்த்திகேயன் உடன் இணையும் ஸ்ரீ லீலா | பைசன் படத்தின் தணிக்கை சான்று மற்றும் ‛ரன்னிங் டைம்' | நான் அசாம், தாய்மொழி நேபாளம் : கயாடு லோகர் புது தகவல் | பாபாஜி குகையில் ரஜினி தியானம், வழிபாடு |
பத்திரிகையாளரும், எழுத்தாளருமான ஆர்.சி.சம்பத் கடந்த 2020ம் ஆண்டு மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இவரது மகள் தான் பிக்பாஸ் புகழ் அனிதா சம்பத். அப்பாவை போலவே அனிதாவும் செய்தியாளராக, செய்திவாசிப்பாளராக ஊடகத்தில் பணியை தொடங்கி பின் பிக்பாஸ் நிகழ்ச்சிக்குபின் இன்று நடிகையாகவும் வலம் வருகிறார். இந்நிலையில் ஜனவரி 16ல் ஆர்.சி.சம்பத்தின் பிறந்தநாள். இதனைமுன்னிட்டு அப்பாவை நினைத்து மிக உருக்கமான பதிவொன்றை அனிதா பதிவு செய்திருந்தார். அதில், 'உங்கள பெத்தவங்க இருக்கும் போதே அவங்கள கொண்டாடுங்க. நல்லா பாத்துக்கோங்க' என அன்பான வேண்டுகோளும் வைத்துள்ளார். இதனையடுத்து தந்தையை நினைத்து நெகிழ்ந்து உருகிக் கொண்டிருக்கும் அனிதாவுக்கு பலரும் ஆறுதலையும், அன்பையும் தெரிவித்துள்ளனர்.