இந்த மாதிரி வெற்றிக்காக 10 ஆண்டுகள் காத்திருந்தேன் : ‛ஆட்டமா தேரோட்டமா' பாடல் குறித்து ரம்யா கிருஷ்ணன் | நிதின் ஜோடியான பூஜா ஹெக்டே | மறுபிரவேசத்துக்கு வலுவான கதாபாத்திரங்களை தேடும் பிரணிதா | ஜனநாயகன் படப்பிடிப்பு தளத்துக்கு திரண்ட ரசிகர்கள் : பாபி தியோல் ஆச்சரிய தகவல் | பொய் செய்தி பரப்பாதீர்கள் : புகழ் வேதனை | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் பிரேமலு நாயகி | மிருணாள் தாக்கூர் உடன் இணைய விரும்பும் சிவகார்த்திகேயன் | நடிகராக அறிமுகமாகும் கங்கை அமரன் | அஜித் 64 படத்தில் மிஷ்கின்? | உண்மை சம்பவங்கள் அடிப்படையில் சிறை : லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட முதல்பார்வை |
2022ம் ஆண்டில் இந்தியத் திரையுலகத்தில் தென்னிந்தியப் படங்கள்தான் அதிக வசூலைக் குவித்தன. பல பெரிய நடிகர்களின் படங்கள் வந்தாலும் ஹிந்திப் படங்கள் பெரிய அளவில் வசூலைக் குவிக்கவில்லை. 'ஆர்ஆர்ஆர், கேஜிஎப் 2, விக்ரம், பொன்னியின் செல்வன், காந்தாரா' ஆகிய தென்னிந்தியப் படங்கள் மட்டுமே சுமார் 3800 கோடியை வசூலித்தன.
கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் தென்னிந்தியப் படங்கள் நல்ல வசூலைக் குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு சாட்சியாக இந்த வருடப் பொங்கலுக்கு வெளிவந்த படங்கள் அமைந்துள்ளன. தமிழில் 'வாரிசு, துணிவு' ஆகிய படங்களும், தெலுங்கில் 'வால்டர் வீரய்யா, வீரசிம்ஹா ரெட்டி' ஆகிய படங்களும் இதுவரையிலும் 450 கோடிக்கும் அதிகமான வசூலைக் குவித்துள்ளன. 'துணிவு' படத்தைத் தவிர மற்ற படங்களின் வசூல் என்ன என்பதை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் அறிவித்துள்ளன. 'துணிவு' படமும் 100 கோடியைக் கடந்திருக்கலாம்.
இந்தப் படங்கள் மேலும் 100 முதல் 150 கோடி வரை வசூலிக்க வாய்ப்புண்டு. இப்படங்கள் முழுவதுமாக ஓடி முடித்த பின் அந்த வசூல் மொத்தமாக 600 கோடியைத் தாண்ட வாய்ப்புள்ளது. 2023ம் ஆண்டின் ஆரம்பமே அமர்க்கமாக உள்ளது என தமிழ், தெலுங்கு திரையுலகினர் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.