நில மோசடி : நடிகை கவுதமி புகார் | சில கற்றார் பேச்சும் இனிமையே - குமரிமுத்து வீடியோவை பகிர்ந்து ஏ.ஆர்.ரஹ்மான் பதிவு | கில்லி பார்த்துவிட்டு திரிஷாவிற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த கீர்த்தி சுரேஷ் | தக்லைப் படத்திலிருந்து மீண்டும் விலகினாரா ஜெயம் ரவி? | மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிக்கும் ‛பைசன் காளமாடன்' | மீண்டும் த்ரில்லர் படத்தில் ஜி.வி.பிரகாஷ் | கடலை சுத்தம் செய்ய கிளம்பிய ரெஜினா | யுனிசெப் தூதராக கரீனா கபூர் நியமனம் | பிளாஷ்பேக்: 'கண்ணீர் திலகம்' ஸ்ரீரஞ்சனி | டைட்டானிக் கேப்டன் காலமானார் |
ராஜமவுலி இயக்கத்தில், ஜுனியர் என்டிஆர், ராம் சரண் மற்றும் பலர் நடித்து கடந்தாண்டு வெளிவந்த தெலுங்குப் படம் 'ஆர்ஆர்ஆர்'. இப்படத்தில் கீரவாணி இசையில் இடம் பெற்ற 'நாட்டு நாட்டு' பாடலுக்கு கோல்டன் குளோப் விருது கிடைத்தது.
படக்குழுவினர் தொடர்ந்து சில விருது நிகழ்வுகளிலும் பங்கேற்றனர். அப்போது பிரபல ஹாலிவுட் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூனை சந்தித்துள்ளனர். அந்த சந்திப்பு பற்றி இயக்குனர் ராஜமவுலி, “மிகச் சிறந்தவரான ஜேம்ஸ் கேமரூன் ஆர்ஆர்ஆர் படத்தைப் பார்த்துள்ளார். அவருக்கு படம் மிகவும் பிடித்ததால் மனைவியையும் படம் பார்க்க பரிந்துரை செய்து மனைவியுடன் மீண்டும் ஒரு முறை பார்க்க விருப்பம் தெரிவித்துள்ளார்.
சார், படத்தைப் பற்றி எங்களுடன் 10 நிமிடங்கள் அது குறித்து விவாதித்ததை மறக்க முடியாது. நீங்கள் சொன்னது போல நான் இந்த உலகத்தின் உச்சியில் நிற்கிறேன், உங்கள் இருவருக்கும் நன்றி,” எனக் குறிப்பிட்டுள்ளார்.