ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? | பிளாஷ்பேக்: உண்ணாவிரதம் இருந்து வெள்ளித்திரையின் உச்சம் தொட்ட பி யூ சின்னப்பா | 4 ஆண்டுகளை நிறைவு செய்த 'மாநாடு' | உங்கள் அறிவுரை தேவைப்படும்போது பெற்றுக் கொள்கிறேன் : ரசிகருக்கு சமந்தா பதில் | தெலுங்கு படமாக இருந்தாலும் கன்னடத்துக்கு முக்கியத்துவம் வேண்டும் : உபேந்திரா | கோவா திரைப்பட விழாவில் சென்னை மாணவியின் ஏஐ படம் |

'வாத்தி' எனப் பெயர் வைத்துவிட்டு தப்பும் தவறுமாய் 'பொங்கள்' வாழ்த்து கூறி ஒரு போஸ்டரை வெளியிட்டுள்ளது படக்குழு. தெலுங்கு நிறுவனம் தயாரிக்க, தெலுங்கு இயக்குனரான வெங்கி அட்லூரி இயக்கத்தில் ஜிவி பிரகாஷ்குமார் இசையில் உருவாகியுள்ள படம் 'வாத்தி'. தமிழ் தெலுங்கில் தயாராகியுள்ள இப்படத்தின் இரண்டாவது சிங்கிளான 'நாடோடி மன்னன்' என்ற பாடல் வெளியீட்டு பற்றி நேற்று மாலை படக்குழு ஒரு போஸ்டரை வெளியிட்டது.
அதில், “இனிய பொங்கள் நல்வாழ்த்துக்கள்” என 'பொங்கல்' என்பதற்கு தவறாக 'பொங்கள்' எனக் குறிப்பிட்டுள்ளார்கள். அடிக்கடி தமிழ், தமிழ் எனப் பேசும் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்குமார் கூட அந்த தவறுதலான போஸ்டரையே அவரது சமூக வலைத்தளங்களிலும் பகிர்ந்துள்ளார். பலரும் அந்தத் தவறை சுட்டிக் காட்டியும் இத்தனை மணி நேரமாக அந்த போஸ்டரை யாரும் திருத்தி மீண்டும் பதிவிடவில்லை.
'வாத்தி' எனப் பெயர் வைத்துவிட்டு இப்படி 'படிக்காத' வாத்தி ஆக இருக்கிறார் இந்த வாத்தி என பலரும் கிண்டலடித்து வருகிறார்கள்.