ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? | பிளாஷ்பேக்: உண்ணாவிரதம் இருந்து வெள்ளித்திரையின் உச்சம் தொட்ட பி யூ சின்னப்பா | 4 ஆண்டுகளை நிறைவு செய்த 'மாநாடு' | உங்கள் அறிவுரை தேவைப்படும்போது பெற்றுக் கொள்கிறேன் : ரசிகருக்கு சமந்தா பதில் | தெலுங்கு படமாக இருந்தாலும் கன்னடத்துக்கு முக்கியத்துவம் வேண்டும் : உபேந்திரா | கோவா திரைப்பட விழாவில் சென்னை மாணவியின் ஏஐ படம் |

தெலுங்கு இயக்குனராக வம்சி பைடிப்பள்ளி தெலுங்கில் குடும்பப் பாங்கான சென்டிமென்ட் படங்களைக் கொடுத்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர். 2007ம் ஆண்டு பிரபாஸ் நடித்த 'முன்னா' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர். அதன்பின் ஜுனியர் என்டிஆர் நடித்த 'பிருந்தாவனம்', ராம் சரண் நடித்த 'எவடு', நாகார்ஜுனா கார்த்தி நடித்த 'ஊபிரி', தமிழில் 'தோழா', மகேஷ் பாபு நடித்த 'மகரிஷி' ஆகிய படங்களை இயக்கியுள்ளார். அனைத்துமே முன்னணி ஹீரோக்கள் நடித்த படங்கள்தான்.
விஜய் நடித்து சில தினங்களுக்கு முன்பு வெளிவந்த 'வாரிசு' அவரது இயக்கத்தில் வந்த இரண்டாவது தமிழ்ப் படம். இப்படம் நேற்றுதான் தெலுங்கில் 'வாரசுடு' என்ற பெயரில் டப்பிங் ஆகி பிரம்மாண்டமாக வெளியானது. நேற்று வம்சி பைடிபள்ளி 'வாரசுடு' படத்தை அவரது அப்பாவுடன் தியேட்டரில் பார்த்தார். படம் முடிந்த பின் வம்சியின் அப்பா தன் மகனைக் கட்டிப் பிடித்து ஆனந்தக் கண்ணீருடன் வாழ்த்தினார்.
அந்த வீடியோவை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து, “வாரசுடு' படத்தை இன்று அப்பா பார்த்து மகிழ்ந்தது எனது மிகப் பெரிய சாதனை. எனது வாழ்நாள் முழுவதும் எனது மனதில் வைத்து இத்தருணத்தைப் போற்றுவேன். நீங்கள்தான் என் ஹீரோ அப்பா. உங்களை எப்போதும் நேசிக்கிறேன்,” என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.
தெலுங்கிலும் 'வாரிசு' படம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளதென அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.