ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? | பிளாஷ்பேக்: உண்ணாவிரதம் இருந்து வெள்ளித்திரையின் உச்சம் தொட்ட பி யூ சின்னப்பா | 4 ஆண்டுகளை நிறைவு செய்த 'மாநாடு' | உங்கள் அறிவுரை தேவைப்படும்போது பெற்றுக் கொள்கிறேன் : ரசிகருக்கு சமந்தா பதில் | தெலுங்கு படமாக இருந்தாலும் கன்னடத்துக்கு முக்கியத்துவம் வேண்டும் : உபேந்திரா | கோவா திரைப்பட விழாவில் சென்னை மாணவியின் ஏஐ படம் |

சின்னத்திரை நடிகை ஆல்யா மானசா சிறிய இடைவெளிக்கு பின் 'இனியா' என்ற சீரியல் மூலம் கம்பேக் கொடுத்தார். ஆல்யாவின் ரசிகர்களும் அவரது கம்பேக்கை நினைத்து மகிழ்ச்சியடைந்தனர். இந்நிலையில், சமீபத்தில் அவருக்கு ஏற்பட்ட விபத்தில் கால் எலும்பு முறிந்ததாகவும், தனக்காக பிரார்த்தனை செய்யுமாறும் இரு தினங்களுக்கு முன் மருத்துவமனையில் காலில் கட்டுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். அதன்பின் மறுநாளே ஷூட்டிங் செல்வதாக பதிவிட்டிருந்தார்.
தற்போது அவர் மீண்டும் மருத்துவமனையில் நோயாளிகள் உடுப்பில் சஞ்சீவுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு 'அறுவை சிகிச்சைக்கு ரெடியாகிவிட்டேன். கொஞ்சம் பயமா இருக்கு' என்று பதிவிட்டுள்ளார். மேலும், கணவர் சஞ்சீவை பற்றி பெருமையாக கூறி 'சஞ்சீவ் எனக்கு கடவுள் கொடுத்த பரிசு' என்றும் அதில் குறிப்பிட்டுள்ளார்.
ஆல்யாவின் இந்த பதிவானது வைரலாகி வரும் நிலையில், அவர் பூரண குணமடைய வேண்டும் என பலரும் பிரார்த்தனை செய்து வருகின்றனர். அதேசமயம், ஆல்யாவுக்கு அறுவை சிகிச்சை என்பதால் ஷூட்டிங்கில் அவர் தொடர்ந்து நடிப்பாரா? இல்லை 'இனியா' தொடரிலிருந்து விலகிவிடுவாரா? எனவும் சிலர் கேள்விகள் எழுப்பி வருகின்றனர்.