ப்ளடி பெக்கராக மாறிய கவின் | மகள் திருமணம் : ஆனந்த கண்ணீரில் ஜெயராம் | இது தந்தை பாசம் : யுவனுக்கு ஊட்டிவிடும் இளையராஜா | தேர்தலில் ஓட்டுபோடாதது ஏன்...? - ஜோதிகா விளக்கம் | அம்மாவுக்காக தான் சொன்னேன் - அதிதி | அமிதாப் உடன் ரஜினி : வேட்டையன் போட்டோஸ் வைரல் | குருவாயூர் அம்பல நடையில் ரிலீஸ் தேதி அறிவிப்பு | ரசிகருக்கு ரூ 22,000 மதிப்பிலான ஷூ பரிசளித்த ஜான் ஆபிரகாம் | பாலகிருஷ்ணா பட இயக்குனரை அடித்தால் பத்தாயிரம் தருவேன் ; ராஜமவுலி கலாட்டா | இந்திய டி-20 அணிக்கு தேர்வான கேரள வீரருக்கு பிஜூமேனன் நேரில் வாழ்த்து |
குழந்தை நட்சத்திரமாக சினிமாவிலும், சின்னத்திரையிலும் நடித்து வந்த கேப்ரில்லா தொலைக்காட்சி நடன நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலமானார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு மேலும் புகழ் பெற்ற கேபி சினிமாவில் ஹீரோயினாக கமிட்டாவார் என்றே அவரது ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்தனர். ஆனால், அவருக்கு கிடைத்தது சீரியல் வாய்ப்பு தான். தற்போது விஜய் டிவியின் 'ஈரமான ரோஜாவே 2' தொடரில் நடித்து வரும் கேபி தனக்கு கிடைத்த வாய்ப்பை கச்சிதமாக பயன்படுத்தி கலக்கி வருகிறார். தொடர்ந்து இன்ஸ்டாவிலும் போட்டோஷூட், ரீல்ஸ் என பகிர்ந்து இளைஞர்களை தன் பக்கம் ஈர்த்து வைத்துள்ளார். கேபியை இன்ஸ்டாவில் 2 மில்லியன் ரசிகர்கள் பாலோ செய்து வருகின்றனர்.
இந்நிலையில், தற்போது தாய்லாந்துக்கு டூர் சென்றுள்ள கேபி அங்குள்ள உயிரியல் பூங்காவிற்குள் புலியின் கூண்டுக்குள் சென்று புலியின் வாலை பிடித்து சேட்டை செய்யும் வீடியோவை வெளியிட்டு, அதன் கேப்ஷனில் 'கூண்டுக்குள்ள குதிக்கும் போது வராத பயம், புலி வால் பிடிக்கும் போது வருது' என தனது திரில்லிங் மொமண்ட்டை ஷேர் செய்துள்ளார்.