ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? | பிளாஷ்பேக்: உண்ணாவிரதம் இருந்து வெள்ளித்திரையின் உச்சம் தொட்ட பி யூ சின்னப்பா | 4 ஆண்டுகளை நிறைவு செய்த 'மாநாடு' | உங்கள் அறிவுரை தேவைப்படும்போது பெற்றுக் கொள்கிறேன் : ரசிகருக்கு சமந்தா பதில் | தெலுங்கு படமாக இருந்தாலும் கன்னடத்துக்கு முக்கியத்துவம் வேண்டும் : உபேந்திரா | கோவா திரைப்பட விழாவில் சென்னை மாணவியின் ஏஐ படம் |

பொங்கலை முன்னிட்டு நான்கு நாட்கள் முன்னதாக நேற்றே விஜய் நடித்த 'வாரிசு', அஜித் நடித்த 'துணிவு' ஆகிய படங்கள் வெளிவந்தன. அதிகாலை காட்சிகளில் இருந்தே இரண்டு படங்களைப் பற்றியும் ரசிகர்களின் கமெண்ட்கள் சமூக வலைத்தளங்களில் நிரம்பி வழிந்தது. நேற்றைய டிவி விவாதங்களில் கூட 'வாரிசு, துணிவு' பற்றித்தான் விவாதமே நடத்தினார்கள். அந்த அளவிற்கு நேற்றைய செய்திகளில் இந்த இரண்டு படங்களும் முக்கியத்துவம் பெற்றது.
படம் வெளியான இரண்டாவது நாள் வழக்கம் போல ஆரம்பமாகும் சண்டை இன்று(ஜன., 12) காலையிலேயே ஆரம்பமாகிவிட்டது. நேற்று வெளியான இரண்டு படங்களில் எந்தப் படம் அதிக வசூலைக் குவித்தது என சமூக வலைத்தளங்களில் ஆளாளுக்கு ஒரு தொகையைச் சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள். 'கிங் ஆப் ஓபனிங், தளபதி விஜய்' என இரண்டு டிரெண்டிங்குகள் டுவிட்டரில் தற்போது நடந்து கொண்டிருக்கிறது.
நான்கு வருடங்களுக்கு முன்பு பொங்கலை முன்னிட்டு ரஜினிகாந்த் நடித்த 'பேட்ட', அஜித் நடித்த 'விஸ்வாசம்' படங்களுக்கு இந்த 'நம்பர் கேம்' எப்படி சண்டையாக மாறியதோ அப்படி இந்த வருட பொங்கலுக்கு விஜய்யா, அஜித்தா யார் 'பாக்ஸ் ஆபீஸ் கிங்' என்ற சண்டை ஆரம்பமாகியுள்ளது. இரண்டு தயாரிப்பாளர்களும் படம் பற்றிய வசூலை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் வரை ஏலம் விடுவது போல 20 கோடி, 40 கோடி, 50 கோடி என இன்று நிறைய கேட்கலாம்,.