மோகன்லாலின் ஹிருதயபூர்வம் படத்துக்கு யு சான்றிதழ் | ‛காஞ்சனா 4' படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் என்னை தேடுவார்கள் : நோரா பதேஹி | ‛கஜினி' சிக்ஸ்பேக்கிற்கு அஜித் தான் காரணம் : ஏ.ஆர்.முருகதாஸ் தகவல் | சன்னி லியோன் நடித்த படத்தின் மூன்றாம் பாகத்தில் தமன்னா | ஜனநாயகன் இசை விழாவில் கலந்து கொள்ள ரஜினி, கமலுக்கு அழைப்பா? | '18 மைல்ஸ் தாரணா' : ‛பேச்சுலர்' இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ராஜமவுலி, மகேஷ்பாபு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடும் ஜேம்ஸ் கேமரூன் | ‛ஆந்திரா கிங் தாலுக்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு! | விநாயகர் சதுர்த்தி படங்கள் வருவது சந்தேகம்? | 'மெட்ராஸ் மேட்னி' குழுவினரை அழைத்துப் பாராட்டிய சிவகார்த்திகேயன் |
இயக்குனர் வெற்றி மாறன் ஓடிடியில் வெளியிடுவதற்கென்று படம் தயாரிக்கிறார், வெப் தொடர் தயாரிக்கிறார். ஓடிடி தளத்தில் சுறுசுறுப்பாக இயங்குபவர்களில் முக்கியமானவராக இருக்கிறார். என்றாலும் ஓடிடியிலும் இயக்குனர்களுக்கு சுதந்திரம் இல்லை என்று கருத்து வெளியிட்டுள்ளார்.
அண்மையில் நடந்த ஒரு இலக்கிய விழாவில் கலந்து கொண்டு அவர் பேசும்போது இதுகுறித்து கூறியதாவது: 3 ஆண்டுகளுக்கு முன்பு ஓடிடியில் படங்களை வெளியிடுவதில் அதிகமான சுதந்திரம் காணப்பட்டது. ஓடிடியில் படங்களை வெளியிடும்போது தயாரித்த பணத்தை எடுத்துவிடலாம். ஆனால் திரையரங்குகளில் அதிகமாக சம்பாதிக்கும் வாய்ப்பு உள்ளது. திரையரங்குகளில் படங்களை வெளியிடும்போது தயாரித்த செலவை விட இரண்டு மடங்கு சம்பாதிக்கும் வாய்ப்பும் உள்ளது. அதேசமயம் போட்ட பணத்தை எடுக்க முடியாமலும் போகலாம்.
இந்த சுதந்திரம் ஓடிடியில் பறிக்கப்படுகிறது. வருங்காலத்தில் ஓடிடியில் குறிப்பிட்ட ஜானரில் படங்களை இயக்க வேண்டும் என்று இயக்குனர்களின் சுதந்திரம் பறிக்கப்படலாம். அதை நோக்கிய கதைகளை யோசிக்கும் கட்டாயம் இயக்குநர்களுக்கு உருவாக நேரும். மக்களுக்கான படம் எடுத்து அதை மக்களுக்காக திரையிடும்போது தான் சினிமாவின் முழு சுதந்திரம் இருக்கும்.
இவ்வாறு வெற்றி மாறன் பேசினார்.