சூர்யாவின் கங்குவா குறித்து ஜோதிகா வெளியிட்ட தகவல் | மே 10ல் அஜித் இல்லாமல் தொடங்கும் குட் பேட் அக்லி படப்பிடிப்பு | முதலாவது 4ம் பாகத் திரைப்படம் - அசத்துமா அரண்மனை 4? | விரைவில் 'பாகுபலி' அனிமேஷன் சீரிஸ் | 'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை | நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை | பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை |
வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில், விஜய், ராஷ்மிகா மந்தனா மற்றும் பலர் நடிக்கும் 'வாரிசு' படத்திற்கு இசையமைத்திருப்பவர் தமன். தெலுங்கில் முன்னணி இடத்தைப் பிடித்துவிட்ட தமன், தமிழில் இன்னும் அந்த இடத்தைப் பிடிக்காமலே இருக்கிறார். 'வாரிசு' படத்திற்குப் பிறகு அவருக்கு அந்த இடம் கிடைத்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை.
'வாரிசு' படம் நாளை வெளியாக உள்ள நிலையில் படத்திற்காக உறுதுணையாக இருந்து உழைத்த ஒவ்வொருவருக்கும் தற்போது சமூக வலைத்தளத்தில் நன்றியைத் தெரிவித்து வருகிறார்.
அந்த வரிசையில் விஜய்க்கும் ஒரு நன்றிப் பதிவிட்டுள்ளார். அதில், “அண்ணா, விஜய் அண்ணா…டியர் அண்ணா, எமோஷனல் காட்சிகளைப் பார்க்கும் போது எனது இதயத்திலிருந்து அழுதேன், கண்ணீர் மிகவும் மதிப்பானது. வாரிசு படம் எனது குடும்பம் அண்ணா, எனது இதயத்திற்கு நெருக்கமானது. இப்படி ஒரு பெரிய வாய்ப்பை எனக்கு அளித்ததற்கு மிக்க நன்றி, டியர் அண்ணா லவ் யூ,” என அண்ணா, அண்ணா என மகிழ்ந்து பதிவிட்டுள்ளார்.
மேலும், 'பிளாக்பஸ்டர் வாரிசு, நாளை முதல்' என்றும் குறிப்பிட்டுள்ளார்.