ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருப்பவர் சமந்தா. தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டு கடந்த சில மாதங்களாக சிகிச்சையில் இருந்தார். அவர் நடித்துள்ள பான் இந்தியா படமான 'சாகுந்தலம்' படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார். அப்போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்களைப் பகிர்ந்து டுவிட்டரில் ஒருவர், “சமந்தாவுக்காக வருந்துகிறோம். அவர் தன்னுடைய அழகு, பிரகாசம் முழுவதையும் இழந்துவிட்டார். விவாகரத்திலிருந்து அவர் மீண்டு வருவார், மேலும் அவரது திரையுலகப் பயணம் உயரத்தைத் தொடும் என ஒவ்வொருவரும் நினைத்தார்கள். ஆனால், தசை அழற்சி நோய் அவரை பெரிதும் பாதித்து, அவரை மீண்டும் பலவீனப்படுத்தியுள்ளது,” என்று குறிப்பிட்டிருந்தார்.
அந்த டுவீட்டை பகிர்ந்து அதற்கு சரியான பதிலடி கொடுத்துள்ளார் சமந்தா. “எனக்கு நடந்ததைப் போல நீங்களும் பல மாதங்கள் சிகிச்சை மற்றும் மருந்துகளுக்கு எப்போதும் செல்ல வேண்டாம் என பிரார்த்திக்கிறேன். உங்கள் பிரகாசத்தை மேலும் சேர்க்க என்னிடமிருந்து சில அன்புகளைத் தருகிறேன்,” என வெள்ளை நிற 'ஹாட்டின்' எமோஜியுடன் பதிவிட்டுள்ளார்.
சமந்தாவின் கருத்துக்கு பலரும் பாராட்டுக்களைத் தெரிவித்து வருகிறார்கள்.