இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? | பிளாஷ்பேக்: உண்ணாவிரதம் இருந்து வெள்ளித்திரையின் உச்சம் தொட்ட பி யூ சின்னப்பா |

அருவி படத்தின் மூலம் புகழ்பெற்றவர் அதிதி பாலன். அதன் பிறகு பெரிய ரவுண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சில காலம் சினிமாவை விட்டு விலகி இருந்தார். 3 வருட இடைவெளிக்கு பிறகு குட்டி ஸ்டோரி என்ற அந்தாலஜி படத்தில் ஒரு கதையில் நடித்தார். கோல்ட் கேஸ், படவேட்டு என்ற இரண்டு மலையாள படங்களில் நடித்து விட்டு மீண்டும் தற்போது தமிழுக்கு வந்திருக்கிறார். தங்கர் பச்சான் இயக்கும் கருமேகங்கள் கலைகின்றன படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். அருவி படத்திற்கு பிறகு முழுமையான நாயகியாக நடிக்கும் படம் இது.
இதற்கிடையில் சமந்தா நடித்துள்ள சாகுந்தலம் படத்தில் நடித்து வந்தார். இதில் பெரிய கேரக்டரில் நடிக்கிறார் என்று எல்லோரும் கருதிக் கொண்டிருக்கும் நிலையில் படத்தில் சமந்தாவின் அதாவது கதைப்படி சகுந்தலையின் தோழிகளில் ஒருத்தியாக அவர் நடித்திருப்பது டிரைலர் மூலம் தெரியவந்துள்ளது. ஒரு வேளை அவருக்கு கதையில் வேறு முக்கியத்தும் எதுவும் இருக்கிறதா என்பது படம் வெளிவந்த பிறகுதான் தெரிய வரும்.