ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? | பிளாஷ்பேக்: உண்ணாவிரதம் இருந்து வெள்ளித்திரையின் உச்சம் தொட்ட பி யூ சின்னப்பா | 4 ஆண்டுகளை நிறைவு செய்த 'மாநாடு' | உங்கள் அறிவுரை தேவைப்படும்போது பெற்றுக் கொள்கிறேன் : ரசிகருக்கு சமந்தா பதில் | தெலுங்கு படமாக இருந்தாலும் கன்னடத்துக்கு முக்கியத்துவம் வேண்டும் : உபேந்திரா | கோவா திரைப்பட விழாவில் சென்னை மாணவியின் ஏஐ படம் |

குணசேகரன் இயக்கத்தில் சமந்தா கதையின் நாயகியாக நடித்துள்ள படம் ‛சாகுந்தலம்'. பன்மொழிகளில் உருவாகி உள்ள இந்த படம் மகாகவி காளிதாசர் எழுதிய புராண கதையான சாகுந்தலம் கதையை அடிப்படையாக வைத்து உருவாகி உள்ளது. இதில் சகுந்தலையாக சமந்தாவும், துஷ்யந்த்தாக தேவ் மோகனும் நடித்துள்ளனர். பிப்., 17ல் திரைக்கு வரும் இந்த படத்தின் டிரைலர் ஐந்து மொழிகளில் இன்று(ஜன., 9) வெளியானது.
ஐதராபாத்தில் நடந்த டிரைலர் வெளியீட்டு விழாவில் நடிகை சமந்தாவும் பங்கேற்றார். தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்தாலும் இந்த பட புரொமோஷனில் அவர் பங்கேற்றுள்ளார். விழாவில் பேசிய இயக்குனர் குணசேகரன்: ‛‛இந்த படத்தின் உண்மையான ஹீரோ சமந்தா தான்'' என்று பாராட்டினார். அதைக்கேட்ட சமந்தா மேடையிலேயே கண்ணீர் விட்டு அழுதார்.
பின்னர் பேசிய சமந்தா, ‛‛எவ்வளவு கஷ்டம் வந்தாலும் சினிமா மீதான காதலை இழக்கவில்லை. இந்த நிகழ்ச்சியில் எப்படியும் பங்கேற்க வேண்டும்'' என வந்ததாக கூறினார்.