ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? | பிளாஷ்பேக்: உண்ணாவிரதம் இருந்து வெள்ளித்திரையின் உச்சம் தொட்ட பி யூ சின்னப்பா | 4 ஆண்டுகளை நிறைவு செய்த 'மாநாடு' | உங்கள் அறிவுரை தேவைப்படும்போது பெற்றுக் கொள்கிறேன் : ரசிகருக்கு சமந்தா பதில் | தெலுங்கு படமாக இருந்தாலும் கன்னடத்துக்கு முக்கியத்துவம் வேண்டும் : உபேந்திரா | கோவா திரைப்பட விழாவில் சென்னை மாணவியின் ஏஐ படம் |

தமிழகத்தைத் தவிர இதர தென்னிந்திய மாநில நகரங்களில் பெங்களூருவில்தான் அதிகமான தியேட்டர்களில் தமிழ்ப் படங்கள் வெளியாகும். இந்த வருட பொங்கலுக்கு வெளியாகும் 'வாரிசு, துணிவு' ஆகிய இரண்டு படங்களுமே அங்கு அதிக தியேட்டர்களில் வெளியாகின்றன. அவற்றிற்கான முன்பதிவுகளும் பரபரப்பாக நடந்து வருகின்றன.
அஜித் நடித்துள்ள 'துணிவு' படத்திற்கு அதிகாலை 2 மணிக்கு சிறப்புக் காட்சிகள் நடக்கின்றன. ரஜினிகாந்த்திற்குப் பிறகு அஜித் படத்திற்குத்தான் இவ்வளவு அதிகாலையில் சிறப்புக் காட்சிகள் நடக்கின்றதாம். அஜித் நடித்துள்ள ஒரு படத்திற்கு அதிகாலையில் காட்சி நடப்பது இதுதான் முதல் முறை என்பது கூடுதல் தகவல்.
இதுவரையிலும் லட்சுமி, கிருஷ்ணா, பாலாஜி, வைபவ், சீனிவாசா ஆகிய தியேட்டர்களில் 2 மணிக்கான காட்சிகளின் முன்பதிவு முழுவதுமாக முடிந்துவிட்டதாம். அதன் மூலம் மட்டுமே 20 லட்ச ரூபாய் வரையில் வசூலாகியுள்ளது என்கிறார்கள். அதிகாலை 3 மணிக்கும், 4 மணிக்கும் பல தியேட்டர்களில் காட்சிகளுக்கான முன்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. கர்நாடகாவில் மட்டும் 40க்கும் மேற்பட்ட சிங்கிள் தியேட்டர்களிலும், 50க்கும் மேற்பட்ட மல்டிபிளக்ஸ் தியேட்டர்களிலும் 'துணிவு' படம் வெளியாகிறது.