நேரடியாக ஓடிடியில் வெளியாகும் கீர்த்தி சுரேஷ் படம் | 22 ஆண்டு காத்திருப்பு : விஷ்ணு மஞ்சு நெகிழ்ச்சி | யாருக்கு யார் வில்லன்? மோகன்லால் மோகன்பாபு போட்டாபோட்டி | மருத்துவர்களின் அலட்சியத்தால் செல்லப்பூனை மரணம் ; திலீப் பட இயக்குனர் போலீசில் புகார் | லண்டனில் கங்குலியுடன் சந்திப்பு ; பிரமித்து விலகாத நவ்யா நாயர் | குபேராவை கேரளாவில் வெளியிடும் துல்கர் சல்மான் | 'தொடரும்' படத்தின் கதை என்னுடையது ; வில்லங்க இயக்குனரின் புதிய சர்ச்சை | 'தி ராஜா சாப்' டீசர் : ஹிந்தி, தெலுங்கு பார்வைகளில் போட்டி | மைனா நந்தினியின் 'குட் டே' | உறுப்பினர் அட்டை இல்லாமல் சினிமாவில் நடிக்க முடியாது : விஷால் அறிக்கை |
சிவா இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் அவரது 42வது படத்தில் திஷா பதானி, யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். 13 கெட்டப்புகளில் சூர்யா நடித்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. குறிப்பாக இரவு நேரங்களில் மட்டுமே நடந்து வரும் இந்த படப்பிடிப்பில் சண்டைக் காட்சிகளை ஸ்டன்ட் மாஸ்டர் சுப்ரீம் சுந்தர் இயக்கி வருகிறார். சூர்யாவுடன் ஏராளமான ஸ்டண்ட் கலைஞர்கள் இணைந்து நடித்து வரும் இந்த சண்டை காட்சி ஹாலிவுட் தொழில்நுட்பத்தில் தயாராகி வருகிறது. குறிப்பாக தமிழ் சினிமாவில் இந்த சண்டை காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் பேசப்படும் வகையில் இருக்கும் என்றும் கூறுகிறார்கள். மேலும் இரண்டு பாகங்களாக உருவாகும் சூர்யா 42 வது படத்தின் முதல் பாகம் முடிவடைந்து ரிலீஸ் ஆனதும், இரண்டாம் பாகம் தொடங்கப்படும் என்றும் படக் குழுவில் தெரிவிக்கிறார்கள்.