இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? | பிளாஷ்பேக்: உண்ணாவிரதம் இருந்து வெள்ளித்திரையின் உச்சம் தொட்ட பி யூ சின்னப்பா |

ரிஷப் ஷெட்டி இயக்கம் நடிப்பில் கடந்த வருடம் செப்டம்பர் 30ம் தேதி வெளிவந்த கன்னடப் படம் 'காந்தாரா'. பெரும் வெற்றிப் படமாக அமைந்த படம் இரண்டு வாரங்களுக்குப் பிறகு தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு வெளியானது. உலகம் முழுவதும் 400 கோடிக்கும் அதிகமான வசூலைக் கடந்த இந்தப் படம் 100 நாட்களைக் கடந்துள்ளது.
அது குறித்து 100 நாள் போஸ்டர்களை வெளியிட்டு படத்தைத் தயாரித்த ஹாம்பலே பிலிம்ஸ் நிறுவனம், “நாம் எப்போதும் போற்றும் ஒரு திரைப்படம். மீண்டும் நம் வேர்களுக்கு அழைத்துச் சென்று, நம் பாரம்பரியங்கள் மீது நமக்கு பிரமிப்பைத் தந்தது. அதை நிறைவேற்றிய அனைவருக்கும் பாராட்டுக்கள்,” எனக் குறிப்பிட்டுள்ளது.
கர்நாடகாவில் சுமார் 40 தியேட்டர்களில் இப்படம் 100 நாட்களைக் கடந்துள்ளது. ஓடிடியில் வெளியான பிறகும் தியேட்டர்களில் ஓடி 100 நாட்களைக் கடந்துள்ளது என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று.