நேரடியாக ஓடிடியில் வெளியாகும் கீர்த்தி சுரேஷ் படம் | 22 ஆண்டு காத்திருப்பு : விஷ்ணு மஞ்சு நெகிழ்ச்சி | யாருக்கு யார் வில்லன்? மோகன்லால் மோகன்பாபு போட்டாபோட்டி | மருத்துவர்களின் அலட்சியத்தால் செல்லப்பூனை மரணம் ; திலீப் பட இயக்குனர் போலீசில் புகார் | லண்டனில் கங்குலியுடன் சந்திப்பு ; பிரமித்து விலகாத நவ்யா நாயர் | குபேராவை கேரளாவில் வெளியிடும் துல்கர் சல்மான் | 'தொடரும்' படத்தின் கதை என்னுடையது ; வில்லங்க இயக்குனரின் புதிய சர்ச்சை | 'தி ராஜா சாப்' டீசர் : ஹிந்தி, தெலுங்கு பார்வைகளில் போட்டி | மைனா நந்தினியின் 'குட் டே' | உறுப்பினர் அட்டை இல்லாமல் சினிமாவில் நடிக்க முடியாது : விஷால் அறிக்கை |
டிக் டாக் மூலம் பிரபலமான தனலெட்சுமி இந்த முறை பிக்பாஸ் வீட்டில் மக்கள் தரப்பு போட்டியாளராக என்ட்ரி கொடுத்திருந்தார். நிகழ்ச்சியின் போது பல சர்ச்சைகளில் சிக்கியிருந்தாலும், பிக்பாஸ் வீட்டில் கடினமான போட்டியாளராக வலம் வந்த தனலெட்சுமியின் எவிக்சனை மக்களே ஏற்றுக்கொள்ளவில்லை. அவர் எலிமினேட் ஆன போது பெரிய அளவில் அவருக்கு சோஷியல் மீடியாக்களில் ஆதரவு எழுந்தது.
இந்நிலையில், நேற்றைய தினம் லைவ் வந்த தனலெட்சுமி, பிக்பாஸிலிருந்து எவிக்ட் ஆனதை ஏற்றுக்கொள்ள சில காலம் பிடித்ததாகவும் மேலும் வீட்டிலும் சில பிரச்னைகள் இருந்ததால் உடனடியாக லைவ் வர முடியவில்லை என்று விளக்கமளித்தார். அப்போது அவரிடம் வழக்கம் போல் பிக்பாஸ் வீடு மற்றும் சக போட்டியாளர்கள் பற்றி கேள்வி எழுப்பபட்டது. அதற்கு பதிலளித்த அவர், அசீம் தான் தனக்கு பிடித்த போட்டியாளர் என்றும் ரச்சிதாவும், கதிரும் தங்கள் உண்மை முகங்களை காட்டாமல் விளையாடி வருவதாகவும் கூறினார்.
விக்ரமன் குறித்து பேசிய தனலெட்சுமி, 'அவர் பிக்பாஸ் கேமில் தேவையில்லாத ஆள். லெட்டர் டாஸ்க் மற்றும் சில டாஸ்க்குகளை விக்ரமன் கேம் மாதிரி கொண்டு செல்லவில்லை' என்று கூறியுள்ளார். அசீம் மற்றும் விக்ரமன் குறித்த தனலெட்சுமியின் இந்த கருத்து சோஷியல் மீடியாவில் சூடான விவதாங்களை கிளப்பியுள்ளது.