ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? | பிளாஷ்பேக்: உண்ணாவிரதம் இருந்து வெள்ளித்திரையின் உச்சம் தொட்ட பி யூ சின்னப்பா | 4 ஆண்டுகளை நிறைவு செய்த 'மாநாடு' | உங்கள் அறிவுரை தேவைப்படும்போது பெற்றுக் கொள்கிறேன் : ரசிகருக்கு சமந்தா பதில் | தெலுங்கு படமாக இருந்தாலும் கன்னடத்துக்கு முக்கியத்துவம் வேண்டும் : உபேந்திரா | கோவா திரைப்பட விழாவில் சென்னை மாணவியின் ஏஐ படம் |

துணிவு படத்தை அடுத்து விக்னேஷ் சிவன் இயக்கும் தனது 62வது படத்தில் நடிக்க போகிறார் அஜித்குமார். ஆக்சன் கதையில் உருவாகும் இந்த படத்தில் ஒரு பிரபலமான வில்லன் நடிகரைத்தான் நடிக்க வைக்க வேண்டும் என்று பலரிடத்தில் பேச்சுவார்த்தை நடத்தி வந்த விக்னேஷ் சிவன் தற்போது தனி ஒருவன் உள்ளிட்ட பல படங்களில் வில்லனாக நடித்துள்ள அரவிந்த்சாமியிடம் பேச்சுவார்த்தை நடத்தி இருப்பதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது.
அதோடு, தனி ஒருவன் படத்தைப் போலவே இந்த படத்திலும் ஒரு மாஸான வில்லனாக அரவிந்த்சாமி நடிக்க இருப்பதாகவும் கூறுகிறார்கள். மேலும் இதற்கு முன்பு சுரேஷ்மேனன் இயக்கத்தில் அரவிந்த்சாமி -ரகுவரன் இணைந்து நடித்த பாசமலர்கள் என்ற படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்திருந்தார் அஜித் குமார். அதையடுத்து அவர்கள் எந்தப் படத்திலும் இணையவில்லை. இந்த நிலையில் தற்போது ஒரு நீண்ட இடைவெளிக்கு பிறகு அஜித் நாயகனாக நடிக்கும் இந்த படத்தில் வில்லனாக நடிக்க போகிறார் அரவிந்தசாமி. இது குறித்த அறிவிப்பு விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாக உள்ளது.