ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? | பிளாஷ்பேக்: உண்ணாவிரதம் இருந்து வெள்ளித்திரையின் உச்சம் தொட்ட பி யூ சின்னப்பா | 4 ஆண்டுகளை நிறைவு செய்த 'மாநாடு' | உங்கள் அறிவுரை தேவைப்படும்போது பெற்றுக் கொள்கிறேன் : ரசிகருக்கு சமந்தா பதில் | தெலுங்கு படமாக இருந்தாலும் கன்னடத்துக்கு முக்கியத்துவம் வேண்டும் : உபேந்திரா | கோவா திரைப்பட விழாவில் சென்னை மாணவியின் ஏஐ படம் |

ஷாருக்கான், தீபிகா படுகோன் நடித்த பதான் வருகிற 25ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியான படத்தின் பாடலில் தீபிகா படுகோன் காவி உடை அணிந்து ஆபாசமாக ஆடியது பலமான எதிர்ப்பை கிளப்பியது. தணிக்கை குழுவும் ஆட்சேபத்திற்குரிய காட்சிகளை நீக்கி விட்டு படத்தை வெளியிடுமாறு கூறியிருக்கிறது. படம் வெளியாக உள்ள நிலையில் வட இந்தியாவில் படத்திற்கு எதிரான போராட்டங்கள் அதிகரித்துள்ளது.
இந்நிலையில், குஜராத்தின் ஆமதாபாத் நகரில் வஸ்திராப்பூர் பகுதியில் உள்ள ஒரு ஷாப்பிங் மாலில் பதான் பட விளம்பர நிகழ்ச்சி நடந்தது. அப்போது பஜ்ரங்தள் அமைப்பை சேர்ந்த தொண்டர்கள் உள்ளே புகுந்கு அங்கிருந்த பேணர்களை கிழித்து எரிந்தனர். விளம்பர ஆர்ச்சுகளை உடைத்து எரிந்தனர். இந்த சம்பவம் பாலிவுட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. படத்தை திரையிடும் தியேட்டர்கள் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று ஜாக்ரன் மஞ்ச் அமைப்பு குஜராத் தியேட்டர்களுக்கு கடிதம் எழுதி உள்ளதாக அதன் தலைவர் ஜெகதீஷ் காத்ரி தெரிவித்துள்ளார்.