மோகன்லாலின் ஹிருதயபூர்வம் படத்துக்கு யு சான்றிதழ் | ‛காஞ்சனா 4' படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் என்னை தேடுவார்கள் : நோரா பதேஹி | ‛கஜினி' சிக்ஸ்பேக்கிற்கு அஜித் தான் காரணம் : ஏ.ஆர்.முருகதாஸ் தகவல் | சன்னி லியோன் நடித்த படத்தின் மூன்றாம் பாகத்தில் தமன்னா | ஜனநாயகன் இசை விழாவில் கலந்து கொள்ள ரஜினி, கமலுக்கு அழைப்பா? | '18 மைல்ஸ் தாரணா' : ‛பேச்சுலர்' இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ராஜமவுலி, மகேஷ்பாபு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடும் ஜேம்ஸ் கேமரூன் | ‛ஆந்திரா கிங் தாலுக்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு! | விநாயகர் சதுர்த்தி படங்கள் வருவது சந்தேகம்? | 'மெட்ராஸ் மேட்னி' குழுவினரை அழைத்துப் பாராட்டிய சிவகார்த்திகேயன் |
கொரோனா காலத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிகமான உதவிகளை செய்து பாராட்டுகளை பெற்றவர் சோனு சூட். சினிமாவில் வில்லனாக நடிக்கும் அவர் நிஜத்தில் ஹீரோவாக பார்க்கப்பட்டார். தற்போதும் வேலைவாய்ப்பு முகாம்களை நடத்தி பலருக்கு உதவி செய்து வருகிறார். இந்த நிலையில் அவர் தனது சமூக வலைத்தள பக்கங்களில் வெளிட்டுள்ள வீடியோ ஒன்று சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அதில் அவர் ஒரு ரயிலில் படிக்கட்டு அருகே அமர்ந்து பயணிக்கும் காட்சி இடம்பெற்றுள்ளது. இப்படி பயணம் செய்வது சட்டவிரோதம் ஆகும். சோனு சூட் போன்றவர்கள் இப்படி செய்வது இளைஞர்களை இத்தகைய ஆபத்தான பயணத்துக்கு தூண்டுவதாகும் என்ற விமர்சனம் எழுந்துள்ளது.
இந்த வீடியோவுக்கு வட இந்திய ரயில்வே கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அது தனது பதிவில் கூறியிருப்பதாவது: லட்சக்கணக்கான மக்களுக்கு முன்மாதிரியாக இருக்கிறீர்கள். ரயிலில் வாசலில் அமர்ந்து பயணம் செய்வது மிகவும் ஆபத்தானது. உங்களது வீடியோ தவறான செய்தியை நாட்டிற்கு கொடுக்கும். இது மாதிரியான வீடியோ உங்களது ரசிகர்களுக்கு தவறான தகவலை கொடுக்கும். தயவு செய்து இது போல் செய்யாதீர்கள். பாதுகாப்பாக பயணம் செய்யுங்கள். இவ்வாறு அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மும்பை ரயில்வே போலீஸ் கமிஷனரும் இது தொடர்பாக சோனுசூட்டை எச்சரித்துள்ளார். இது குறித்து அவர் தனது பதிவில் “இது மிகவும் ஆபத்தான பயணம் . இது போன்ற காரியத்தில் ஈடுபடவேண்டாம். படங்களில் வேண்டுமானால் ரயிலின் வாசலில் அமர்ந்து பயணம் செய்யலாம். படம் நிஜ வாழ்க்கை கிடையாது. அனைத்து பாதுகாப்பு வழிமுறைகளையும் பின்பற்றுங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து சோனு சூட் தனது பதிவில் “எனது செயலுக்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். சட்டத்தை மீறும் எண்ணம் எதுவும் இல்லை. தினமும் ஆயிரக்கணக்கான ஏழை மக்கள் ரயில் படிக்கட்டில் அமர்ந்து பயணம் செய்வதை பார்த்திருக்கிறேன். அவர்களது கஷ்டத்தை உணர்ந்து பார்க்கவே சிறிது நேரம் அந்த பயணத்தை மேற்கொண்டேன்” என்று கூறியிருக்கிறார்.