இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? | பிளாஷ்பேக்: உண்ணாவிரதம் இருந்து வெள்ளித்திரையின் உச்சம் தொட்ட பி யூ சின்னப்பா |

‛தி பேமிலி மேன்' தொடரை இயக்கிய ராஜ் மற்றும் டீகே இயக்கி உள்ள வெப் தொடர் பார்சி. இதில் விஜய்சேதுபதி, ஷாஹித் கபூர், கே கே மேனன், ராஷி கண்ணா, அமோல் பலேகர், ரெஜினா காசண்ட்ரா மற்றும் புவன் அரோரா உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த தொடர் வருகிற பிப்ரவரி 10ம் தேதி அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. இது ஒரு க்ரைம் த்ரில்லர் தொடர். கார்பரேட் நிறுவனங்களை எதிர்த்து நிற்கும் ஒரு தெருக்கூத்து கலைஞனின் கதை. இதில் தெருக்கூத்து கலைஞனாக விஜய்சேதுபதி நடித்துள்ளார்.
இதுகுறித்து இயக்குனர்கள் ராஜ் மற்றும் டீகே கூறியதாவது: தி பேமிலி மேனின் மிகப்பெரிய வெற்றிகரமான கூட்டணிக்குப் பிறகு, எங்களின் அடுத்த புதிய தொடருக்காக பிரைம் வீடியோவுடன் மீண்டும் இணைவதில் நாங்கள் மிக்க மகிழ்ச்சியடைகிறோம். இது எங்களுக்கு மிகவும் பிடித்த மனதுக்கு நெருக்கமான கதைகளில் ஒன்றாகும், இதை நாங்கள் மிகுந்த ஆர்வத்துடன் உருவாக்கிவந்த போது பெருந்தொற்றுநோய் காலத்தில் ஏற்பட்ட ஏற்ற தாழ்வுகளினூடே பயணித்துப் படமாக்கியுள்ளோம். அடிப்படையில் இந்த தொடரின் உருவாக்கம் அதிகளவில் வியர்வையையும் கண்ணீரையும் சிந்த வைத்திருக்கிறது.
தி பேமிலி மேனுக்குப் பிறகு, மற்றொரு அற்புதமான, தனித்துவமான உலகத்தைக் கொண்டு வர எங்களுக்கு நாங்களே சவால் விட்டுக்கொண்டோம். பிரைம் வீடியோவில் பிப்ரவரி 10ம் தேதி வெளியாகவிருக்கும் தொடருக்கு மக்கள் மக்கள் ஆதரவு தருவார்கள் என்று நம்புகிறோம் என்கிறார்கள் இரட்டை இயக்குனர்கள். ஹிந்தியில் தயாராகி உள்ள இந்த தொடர், தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளிலும் வெளியாகிறது.