நேரடியாக ஓடிடியில் வெளியாகும் கீர்த்தி சுரேஷ் படம் | 22 ஆண்டு காத்திருப்பு : விஷ்ணு மஞ்சு நெகிழ்ச்சி | யாருக்கு யார் வில்லன்? மோகன்லால் மோகன்பாபு போட்டாபோட்டி | மருத்துவர்களின் அலட்சியத்தால் செல்லப்பூனை மரணம் ; திலீப் பட இயக்குனர் போலீசில் புகார் | லண்டனில் கங்குலியுடன் சந்திப்பு ; பிரமித்து விலகாத நவ்யா நாயர் | குபேராவை கேரளாவில் வெளியிடும் துல்கர் சல்மான் | 'தொடரும்' படத்தின் கதை என்னுடையது ; வில்லங்க இயக்குனரின் புதிய சர்ச்சை | 'தி ராஜா சாப்' டீசர் : ஹிந்தி, தெலுங்கு பார்வைகளில் போட்டி | மைனா நந்தினியின் 'குட் டே' | உறுப்பினர் அட்டை இல்லாமல் சினிமாவில் நடிக்க முடியாது : விஷால் அறிக்கை |
மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் போன்ற வெற்றி படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் தற்போது விஜய்யை வைத்து புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார். சென்னையில் படப்பிடிப்பு துவங்கி நடந்து வருகிறது. இந்நிலையில் நடிகர் ஜெயம் ரவியை சமீபத்தில் சந்தித்து பேசி உள்ளார் லோகேஷ் கனகராஜ். அப்போது ஒரு கதையை அவரிடம் கூறி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த தகவலை நடிகர் ஜெயம் ரவி ஒரு ஊடகத்தின் பேட்டியில் தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பு அகிலன் திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பின் போது நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. விஜய்யை இயக்கிவிட்டு அடுத்து ஜெயம் ரவியை லோகேஷ் இயக்க உள்ளாரா அல்லது விஜய்யின் 67வது படத்திலேயே அவரை நடிக்க வைக்க பேசி உள்ளாரா என்பது விரைவில் தெரிய வரும்.