ஒரே மாதத்தில் திரைக்கு வரும் கிர்த்தி ஷெட்டியின் மூன்று படங்கள் | 100 பேர் வந்தாலும்....! பிரதீப் ரங்கநாதனின் 'டியூட்' படத்தின் டிரைலர் வெளியானது! | ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் இணையும் முன்னனி நடிகைகள் | இம்மாதத்தில் ஓடிடியில் வெளியாகும் 'லோகா, இட்லிகடை' | 500 கோடி வசூலை நோக்கி 'காந்தாரா சாப்டர் 1' | அரசன் படத்தின் புதிய அப்டேட் : சுதீப் இணைய வாய்ப்பு | சிவகார்த்திகேயன் உடன் இணையும் ஸ்ரீ லீலா | பைசன் படத்தின் தணிக்கை சான்று மற்றும் ‛ரன்னிங் டைம்' | நான் அசாம், தாய்மொழி நேபாளம் : கயாடு லோகர் புது தகவல் | பாபாஜி குகையில் ரஜினி தியானம், வழிபாடு |
கர்நாடகத்தை சேர்ந்தவர் கிஷோர். கன்னட சினிமாவில் நடித்து வந்த இவர் பொல்லாதவன் படத்தின் மூலம் தமிழுக்கு வந்தார். அதன்பிறகு பல படங்களில் வில்லன், குணசித்ர வேடங்களில் நடித்து வருகிறார். வனயுத்தம் என்ற படத்தில் சந்தன கடத்தல் வீரப்பனாக நடித்தார். ஹரிதாஸ், கடிகார மனிதர்கள் உள்ளிட்ட சில படங்களில் கதையின் நாயகனாகவும் நடித்திருக்கிறார். சமீபத்தில் ஓடிடியில் வெளியான பேட்டகாளி தொடரில் நாயகனாக நடித்திருந்தார்.
கிஷோர் சமூக வலைத்தளங்களில் பிசியாக இருப்பவர். சில மாதங்களுக்கு முன்பு காஷ்மீர் பண்டிட்கள் குறித்து நடிகை சாய் பல்லவியின் கருத்தை ஆதரித்து பதிவிட்டு விமர்சனத்திற்கு உள்ளானார். டில்லியில் நடந்து வந்த விவசாயிகள் போராட்டத்தை ஆதரித்தும், மத்திய அரசை கடுமையாக விமர்சித்தும் பதிவிட்டு வந்தார்.
சமீபத்தில் தொழில் அதிபர் அதானி குறித்து தனது டுவிட்டரில் பதிவிட்டிருந்தார். அதானி ஒரு பிரபல மீடியாவை விலைக்-கு வாங்கிவிட்டதை குறிப்பிட்டு அன்றைய தினம் கருப்பு தினம் என்று கூறியிருந்தார். இதை தொடர்ந்து அதானி நிறுவனம் டுவிட்டர் நிறுவனத்தில் புகார் அளித்ததாக தெரிகிறது. அதன் அடிப்படையில் தற்போது கிஷோரின் டுவிட்டர் கணக்கை அந்த நிறுவனமே முடக்கி விட்டது. அவரை பின் தொடரும் ரசிகர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.