ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? | பிளாஷ்பேக்: உண்ணாவிரதம் இருந்து வெள்ளித்திரையின் உச்சம் தொட்ட பி யூ சின்னப்பா | 4 ஆண்டுகளை நிறைவு செய்த 'மாநாடு' | உங்கள் அறிவுரை தேவைப்படும்போது பெற்றுக் கொள்கிறேன் : ரசிகருக்கு சமந்தா பதில் | தெலுங்கு படமாக இருந்தாலும் கன்னடத்துக்கு முக்கியத்துவம் வேண்டும் : உபேந்திரா | கோவா திரைப்பட விழாவில் சென்னை மாணவியின் ஏஐ படம் |

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற நாகூர் தர்காவில் ஆண்டு தோறும் சந்தனகூடு திருவிழா நடக்கும். இதில் இந்தியா முழுக்க உள்ள இஸ்லாமியர்கள் கலந்து கொள்வார்கள். 466ம் ஆண்டு சந்தனகூடு திருவிழா கடந்த மாதம் 24ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. இந்த ஆண்டு ஸ்தூபி இசையுடன் கோலாட்டம், பறையாட்டம், நையாண்டி மேளம் உள்ளிட்ட இசை நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இதன் முக்கிய நிகழ்ச்சியான சந்தனகூடு வைபவம் நடந்தது.
சந்தனகூடு விழாவில் கலந்து கொள்ள வந்த ஏ.ஆர்.ரஹ்மான் காரில் நாகூர் சென்றார். மக்கள் கூட்டம், போக்குவரத்து நெரிசல் காரணமாக அவரால் தர்காவுக்கு செல்ல முடியவில்லை. அதனால் ஒரு ஆட்டோவில் ஏறி தர்காவுக்கு சென்றார். அவரை பின் தொடர்ந்து மற்றொரு ஆட்டோவில் அவரது பாதுகாவலர்களும், போலீசாரும் சென்றனர்.
தர்காவுக்கு ஆட்டோவில் வந்து இறங்கிய ரஹ்மானை பார்த்து பொதுமக்கள் ஆச்சர்யமடைந்தனர். கூட்டம் கூடுவதற்குள் அவரை தர்காவுக்குள் அழைத்துச் சென்றனர். பின்னர் அங்கு நடந்த சந்தனம் பூசும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் வழிபாடு செய்து விட்டு திரும்பினார்.