நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

நடிகர் சரத்குமார் கடைசியாக நடித்த 'பொன்னியின் செல்வன்' படத்தில் நடித்திருந்தார் . இந்த படத்திற்கு பிறகு விஜய்யின் 'வாரிசு' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதுதவிர தி ஸ்மைல் மேன், ஆழி உள்ளிட்ட தமிழ், தெலுங்கு, மலையாளத்தில் 10க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இதில் மாதவ் தாசன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'ஆழி'. வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகும் இதில் மிரட்டலான தோற்றத்தில் சரத்குமார் நடித்துள்ளார். ஆனந்த் ஒளிப்பதிவு செய்ய, ஜெஸ்சி என்பவர் இசையமைத்து வருகிறார். 888 புரொக்ஷ்ன்ஸ் நிறுவனம் சார்பில் பொன்னு கண்ணன் தயாரிக்கிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்று தற்போது தயாரிப்பு பணிகள் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் முதல்பார்வை வெளியிடப்பட்டுள்ளது. இதில் மிரட்டலான லுக்கில் சரத்குமார் உள்ளார்.