திரையுலகில் 22 ஆண்டுகள்: நயன்தாரா நெகிழ்ச்சி | துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்க 3 கோடி சம்பளம் வாங்கிய பூஜா ஹெக்டே! | புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் | துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் |
பிரசாந்த் நீல் இயக்கத்தில் கன்னட நடிகர் யஷ் நடிப்பில் வெளியான கேஜிஎப் படத்தின் இரண்டு பாகங்களும் மிகப் பெரிய அளவில் வெற்றி பெற்றது. குறிப்பாக, கேஜிஎப் -2 படம் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து சாதனை செய்தது. இந்த நிலையில் தற்போது பிரபாஸ் நடித்து வரும் சலார் படத்தை இயக்கி வரும் பிரசாந்த் நீல் அந்த படத்தை முடித்ததும் கேஜிஎப்-3 படத்தை தொடங்கப் போவதாக சமீபத்தில் அப்படத்தின் தயாரிப்பாளர் அறிவித்திருந்தார்.
இந்த நிலையில் தற்போது கேஜிஎப் படத்தின் நாயகன் யஷை இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா மற்றும் அவரது சகோதரர் குர்ணால் பாண்ட்யா ஆகியோர் சந்தித்துள்ளனர். இந்த போட்டோவை பகிர்ந்து கேஜிஎப் 3 என்று குறிப்பிட்டுள்ளனர். அதையடுத்து இந்த இரண்டு கிரிக்கெட் வீரர்களும் கேஜிஎப் திரைப்படத்தில் நடிக்கிறார்களா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.