மொழிக்காக ‛தக் லைப்' படத்திற்கு தடை விதிக்க முடியாது : உச்ச நீதிமன்றம் | வெறுப்பை பரப்பி சினிமாவை அழிக்கும் ஒரு குழு: கார்த்திக் சுப்பராஜ் பரபரப்பு குற்றச்சாட்டு | விமான விபத்து ரொம்ப வருத்தமா இருக்கு: ரஜினி கவலை | சிம்பு, வெற்றிமாறன் கூட்டணியில் இணையும் பிரபலங்கள் | ஜுன் 20ல் மும்முனைப் போட்டி | அதிக நேரம் ஓடும் படங்களில் 5வது இடம் பிடித்த 'குபேரா' | விஜய் சேதுபதி - பூரி ஜெகன்னாத் படத்திற்கு ஹிந்தியில் தலைப்பு? | நேரடியாக ஓடிடியில் வெளியாகும் கீர்த்தி சுரேஷ் படம் | 22 ஆண்டு காத்திருப்பு : விஷ்ணு மஞ்சு நெகிழ்ச்சி | யாருக்கு யார் வில்லன்? மோகன்லால் மோகன்பாபு போட்டாபோட்டி |
பாலிவுட் நடிகர் சல்மான்கான் நேற்று தனது 58வது பிறந்த நாளை கொண்டாடினார். மும்பையிலுள்ள சல்மான்கானின் கேலக்ஸி வீட்டின் முன்பு ரசிகர்கள் பதாகைகளுடன் பெரிய அளவில் கூடியுள்ளனர். அப்போது சல்மான்கான் தனது தந்தை சலீம்கானுடன் இணைந்து தனது வீட்டு பால்கனியில் நின்றபடி ரசிகர்களைப்பார்த்து கையசைத்தார். அப்போது அங்கு கூடிநின்ற ரசிகர்களுக்குகிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. அப்போது அவர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர்.
இதனிடையே சல்மான்கானின் பிறந்தநாள் நிகழ்ச்சியில் ஷாரூக்கான், தபு, பூஜா ஹெக்டே, சுனில் ஷெட்டி உள்பட பல பாலிவுட் திரை பிரபலங்கள் கலந்து கொண்டு அவரை வாழ்த்தியுள்ளனர். இந்நிலையில் தனக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் இன்ஸ்டாகிராமில் நன்றி தெரிவித்துள்ளார் சல்மான்கான்.