நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

பாலிவுட் நடிகர் சல்மான்கான் நேற்று தனது 58வது பிறந்த நாளை கொண்டாடினார். மும்பையிலுள்ள சல்மான்கானின் கேலக்ஸி வீட்டின் முன்பு ரசிகர்கள் பதாகைகளுடன் பெரிய அளவில் கூடியுள்ளனர். அப்போது சல்மான்கான் தனது தந்தை சலீம்கானுடன் இணைந்து தனது வீட்டு பால்கனியில் நின்றபடி ரசிகர்களைப்பார்த்து கையசைத்தார். அப்போது அங்கு கூடிநின்ற ரசிகர்களுக்குகிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. அப்போது அவர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர்.
இதனிடையே சல்மான்கானின் பிறந்தநாள் நிகழ்ச்சியில் ஷாரூக்கான், தபு, பூஜா ஹெக்டே, சுனில் ஷெட்டி உள்பட பல பாலிவுட் திரை பிரபலங்கள் கலந்து கொண்டு அவரை வாழ்த்தியுள்ளனர். இந்நிலையில் தனக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் இன்ஸ்டாகிராமில் நன்றி தெரிவித்துள்ளார் சல்மான்கான்.