நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

ரா.வெங்கட் இயக்கி உள்ள படம் ‛கிடா'. இந்த படம் சமீபத்தில் சென்னையில் நடந்த சர்வதேச திரைப்பட விழாவில் முதல் இடம் பிடித்து விருதினை பெற்றது. இதில் சில மாதங்களுக்கு முன் மரணம் அடைந்த ‛பூ' ராமு கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். அவருடன் காளி வெங்கட், பாண்டியம்மா, கமலி, லோகி, மாஸ்டர் தீபன் நடித்திருக்கிறார்கள். எம்.ஜெயபிரகாஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார், தீசன் இசை அமைத்துள்ளார். இந்த படம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் திரைக்கு வருகிறது.
இதுகுறித்து படத்தின் இயக்குனர் ரா.வெங்கட் கூறியதாவது: இந்த படம் விருதுக்காக எடுக்கப்பட்டதல்ல. தியேட்டருக்கு வருவதற்கு சற்று தாமதம் ஆனதால் பெஸ்டிவலுக்கு அனுப்பி வைத்தோம். அது அனைவராலும் பாராட்டப்பட்டு விருதுகளை குவித்தது. கோவா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டபோது படத்தை பார்த்த அனைவரும் அதில் நடித்திருந்த ‛பூ' ராமு பற்றி விசாரித்தார்கள். அவருக்கு கட்டாயம் தேசிய விருது கிடைக்கும் என்றார்கள். சென்னை திரைப்பட விழாவிலும் அதையே சொன்னார்கள். நாங்களும் படத்தை தேசிய விருதுக்கு அனுப்ப இருக்கிறோம். பூ ராமுக்கு விருது கொடுத்து கவுரவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.
தீபாவளிக்கு புதுச்சட்டை கேட்கிறான் பேரன். ஏழை தாத்தாவால் அதை வாங்கி கொடுக்கிற அளவிற்கு பணமில்லை. அதனால் தனது ஆட்டை அவர் கசாப்பு கடை காரனுக்கு விற்கிறார். அந்த ஆட்டை நேசிக்கும் பேரன் எனக்கு சட்டையே வேண்டாம் ஆடுதான் வேண்டும் என்கிறான். இந்த நிலையில் ஆடு திருடு போகிறது. அந்த ஆடு இவர்களிடம் வந்து சேர்ந்ததா என்பதுதான் படத்தின் கதை. என்றார்.